அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா | புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் |
டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிகர் ரவி மோகன் அவரது 34வது படத்தில் நடித்து வருகிறார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. படத்திற்கான கூடுதல் திரைக்கதையை இயக்குனர் ரத்னகுமார் எழுதுகிறார்.
நாயகியாக தவுதி ஜிவால், முக்கிய வேடங்களில் பிரதீப் ஆண்டனி, சக்தி வாசு ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என அறிவித்திருந்த நிலையில் இப்போது ஒரு சில காரணங்களால் அவர் விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதில் சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். நாளை படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது. அதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் சாம் சிஎஸ் பெயர் இடம் பெற்றுள்ளது.