ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல எழுத்தாளர் தாமரை செந்தூர்பாண்டி எழுதிய நாவல் 'அலைகள் ஓய்வதில்லை'. கடல்புறத்து மீனவ மக்களின் வாழ்க்கையையும், அவர்களது காதலையும் யதார்த்தமாக சொன்ன நாவல். இந்த கதையைத்தான் சிவகுமார், ராதா, அருணா, சிவச்சந்திரன், கவுண்டமணி நடிக்க 'ஆனந்த ராகம்' என்ற பெயரில் படமாக இயக்கினார் பரணி. நாவலை திரைக்கதையாக மாற்றியவர் பஞ்சு அருணாசலம்.
நாவலில் இருந்த மீனவ மக்களின் வாழ்வியலை விட்டு விட்டு காதலை மட்டும் எடுத்துக் கொண்டு அதையும் சொதப்பி உருவானது படம். கடும் விமர்சனத்தை சந்தித்த படம் பெரும் தோல்வியை தழுவியது. படத்தை ஓரளவிற்கு காப்பாற்றியதும், நிலைத்து நின்றதும் இளையராஜாதான். கடலோரம்..., கனவுகளே... மேகம் கருக்குது... ஒரு ராகம் ஆகிய பாடல்கள் இப்போதும் ஒலித்துக் கொண்டது.
பின்னாளில் நாவல் ஆசிரியர் தாமரை செந்தூர் பாண்டி தனது நாவலை திரைப்படமாக்கி சிதைத்து விட்டார்கள் என்று குற்றம் சாட்டினார். அதன்பிறகு தனது நாவல்களை தானே படமாக இயக்கினார்.