நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
பிரபல எழுத்தாளர் தாமரை செந்தூர்பாண்டி எழுதிய நாவல் 'அலைகள் ஓய்வதில்லை'. கடல்புறத்து மீனவ மக்களின் வாழ்க்கையையும், அவர்களது காதலையும் யதார்த்தமாக சொன்ன நாவல். இந்த கதையைத்தான் சிவகுமார், ராதா, அருணா, சிவச்சந்திரன், கவுண்டமணி நடிக்க 'ஆனந்த ராகம்' என்ற பெயரில் படமாக இயக்கினார் பரணி. நாவலை திரைக்கதையாக மாற்றியவர் பஞ்சு அருணாசலம்.
நாவலில் இருந்த மீனவ மக்களின் வாழ்வியலை விட்டு விட்டு காதலை மட்டும் எடுத்துக் கொண்டு அதையும் சொதப்பி உருவானது படம். கடும் விமர்சனத்தை சந்தித்த படம் பெரும் தோல்வியை தழுவியது. படத்தை ஓரளவிற்கு காப்பாற்றியதும், நிலைத்து நின்றதும் இளையராஜாதான். கடலோரம்..., கனவுகளே... மேகம் கருக்குது... ஒரு ராகம் ஆகிய பாடல்கள் இப்போதும் ஒலித்துக் கொண்டது.
பின்னாளில் நாவல் ஆசிரியர் தாமரை செந்தூர் பாண்டி தனது நாவலை திரைப்படமாக்கி சிதைத்து விட்டார்கள் என்று குற்றம் சாட்டினார். அதன்பிறகு தனது நாவல்களை தானே படமாக இயக்கினார்.