இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்கள் மூலம் தெலுங்குத் திரையுலகத்தை உலக அளவிலும், ஆஸ்கர் விருது பெறும் அளவிலும் கொண்டு சென்றவர் இயக்குனர் ராஜமவுலி. அடுத்ததாக மகேஷ்பாபு நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளார்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள அலுமினிய பேக்டரியில் நடந்து வருகிறது. அடுத்த மாதம் முதல் கென்யா நாட்டில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
இந்தப் படத்திற்காக கலைஞர்கள் அனைவரிடமும் 'வெளிப்படுத்தப்படாத ஒப்பந்தம்' போடப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 'Non-disclousure Agreement' சுருக்கமாக 'NDA' என்ற இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுபவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் எதைப் பற்றியும் வெளியில் சொல்லக் கூடாது என்பது அர்த்தம். அதாவது படத்தின் ரகசியம் அனைத்தையும் காப்பாற்ற வேண்டும். அப்படி அவர்கள் மூலம் ஏதாவது ரகசியம் வெளியே போனால், அதற்கு நஷ்டஈடாக பெரும் தொகை செலுத்த வேண்டி வரும். அதோடு படப்பிடிப்புத் தளத்தில் கண்டிப்பாக மொபைல் போன் எடுத்து வரக் கூடாது உள்ளிட்ட சில முக்கிய 'கண்டிஷன்கள்' போடப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு வருட காலம் நடைபெற உள்ளதாம். அதற்குள் அக்காட்சிகளை வேறு யாரும் காப்பி அடித்துவிடக் கூடாது என்பதால்தான் இப்படியான ஒப்பந்தம் என்கிறார்கள்.