'இட்லி கடை' படத்தின் நீளம் குறித்து தகவல் இதோ! | என் அம்மா அளவுக்கு என்னால் சினிமாவில் சாதிக்க முடியாது : ஜான்வி கபூர் | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு தொடங்கியது! | தேசிய விருது : தன் சாதனையை முறியடித்த குட்டி தேவதைக்கு கமல் வாழ்த்து | பிளாஷ்பேக்: சாதனைத் திரைத் தாரகைகள் சரிதா, ஷோபாவை தமிழுக்கு அறிமுகப்படுத்திய கே பாலசந்தர் | பாடல்களில் ஆடியே பிரபலமானேன் என்கிறார் தமன்னா | விரைவில் மறுமணம் செய்யப் போகிறாரா சமந்தா | இவர்கள் தான் எனது ரோல் மாடல் என்கிறார் சாந்தனு | நாளை ஓடிடியில் வெளியாகும் அனுஷ்காவின் காட்டி | கதை நாயகியாக "யாஷிகா ஆனந்த்" நடிக்கும் “டாஸ்” |
'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்கள் மூலம் தெலுங்குத் திரையுலகத்தை உலக அளவிலும், ஆஸ்கர் விருது பெறும் அளவிலும் கொண்டு சென்றவர் இயக்குனர் ராஜமவுலி. அடுத்ததாக மகேஷ்பாபு நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளார்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள அலுமினிய பேக்டரியில் நடந்து வருகிறது. அடுத்த மாதம் முதல் கென்யா நாட்டில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
இந்தப் படத்திற்காக கலைஞர்கள் அனைவரிடமும் 'வெளிப்படுத்தப்படாத ஒப்பந்தம்' போடப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 'Non-disclousure Agreement' சுருக்கமாக 'NDA' என்ற இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுபவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் எதைப் பற்றியும் வெளியில் சொல்லக் கூடாது என்பது அர்த்தம். அதாவது படத்தின் ரகசியம் அனைத்தையும் காப்பாற்ற வேண்டும். அப்படி அவர்கள் மூலம் ஏதாவது ரகசியம் வெளியே போனால், அதற்கு நஷ்டஈடாக பெரும் தொகை செலுத்த வேண்டி வரும். அதோடு படப்பிடிப்புத் தளத்தில் கண்டிப்பாக மொபைல் போன் எடுத்து வரக் கூடாது உள்ளிட்ட சில முக்கிய 'கண்டிஷன்கள்' போடப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு வருட காலம் நடைபெற உள்ளதாம். அதற்குள் அக்காட்சிகளை வேறு யாரும் காப்பி அடித்துவிடக் கூடாது என்பதால்தான் இப்படியான ஒப்பந்தம் என்கிறார்கள்.