இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
பிரபல வில்லன் நடிகரான விஜய ரங்கராஜூ மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது காயமடைந்ததாகவும் அதன் பிறகு சென்னையில் வந்து மருத்துவ சிகிச்சை எடுத்து வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது. அவருக்கு தீக்சிதா, பத்மினி என இரண்டு மகள்கள் இருக்கின்றன. இவர் பிறந்தது புனேயில். வளர்ந்தது மும்பையில். நடிகராக அறிமுகமானது தெலுங்கில். பாலகிருஷ்ணா நடித்த 'பைரவ தீபம்' என்கிற படம் மூலம் அறிமுகமான இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார்.
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'வியட்நாம் காலனி' திரைப்படம் தமிழிலும் பிரபு நடிக்க அதே பெயரில் ரீமேக் ஆன போது மலையாளத்தில் அந்த படத்தில் வில்லனாக ராவுத்தர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய ரங்கராஜு தான் தமிழிலும் நடித்தார். அதற்கு முன்பு ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட பல படங்களில் சின்னச்சின்ன அடியாள் கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு இந்த ராவுத்தர் கதாபாத்திரம் ரசிகர்களிடம் இன்னும் நல்ல அறிமுகம் தேடித்தந்தது. இவரது உண்மையான பெயர் ராஜ்குமார் என்றாலும் சினிமாவிற்காக விஜய ரங்கராஜூ என மாற்றிக்கொண்டார். தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் இவரது மறைவு குறித்த செய்தியை வெளியிட்டு அவருக்கு இரங்கலை தெரிவித்துள்ளது.