தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை | திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? |
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஆனந்த ராகம் தொடர் கடந்த 2022ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஹீரோயின் கதாபத்திரத்திற்கு அடுத்தப்படியாக, ஹீரோயினின் வாய் பேச முடியாத தங்கை அபியின் கதாபத்திரமும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த அபி கதாபத்திரத்தில் 750 எபிசோடுகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஸ்வேதா.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடுள்ள பதிவில், தன் வாழ்க்கையின் முக்கிய கட்டத்திற்கு வந்திருப்பதாகவும், அதற்காக தனது சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவதாகவும் பதிவிட்டு ஆனந்தராகம் தொடரிலிருந்து விலகிவிட்டதாக கூறியுள்ளார்.
அண்மையில் தான் ரோஜா 2 தொடரிலும் ஸ்வேதா என்ட்ரி கொடுத்து நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அதற்குள் அவர் சினிமா கேரியரிலிருந்து முற்றிலும் விலகியுள்ளதாக தெரிவித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.