இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க நித்யா மேனன் கதாநாயகியாக நடித்துள்ள படம் 'காதலிக்க நேரமில்லை'. இந்த படம் வரும் ஜனவரி 14ம் தேதி வெளியாகிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நித்யா மேனன் காட்டிய பாரபட்சமான நிகழ்வு ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வீடியோவாக வைரல் ஆகி வருவதுடன் நெட்டிசன்களின் கடும் விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளது.
அந்த நிகழ்வுக்கு வந்த நித்யா மேனனை அந்த படத்தின் மக்கள் தொடர்பாளர் வரவேற்று பத்திரிகையாளர்களுடன் பேசுவதற்காக மைக் முன்னால் நிற்க சொல்லி பேச சொல்கிறார். அப்போது நித்யா மேனனிடம் அவர் கைகுலுக்க கை நீட்டுகிறார். ஆனால் நித்யா மேனன், ''ஐயோ எனக்கு உடம்பு சரியில்லை.. உங்களை தொட்டால் என்னிடமிருந்து கோவிட் ஏதாவது உங்களுக்கு ஒட்டிக் கொள்ள போகிறது'' எனக் கூறி சிரித்தபடியே சொல்லி கை கொடுப்பதை தவிர்க்கிறார்.
ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே படத்தின் வில்லன் நடிகர் வினய் ராய், நித்யா மேனனை பார்த்து ஹாய் என்று கூறியபடி அருகில் வர அவரை மெதுவாக கட்டிப்பிடிக்கிறார் நித்யா மேனன். அது மட்டுமல்ல அதே நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சற்று முன் வந்து தன்னை கடந்து சென்ற இயக்குனர் மிஷ்கினை தானே வலிய அழைத்து அவரது கன்னத்தில் முத்தமிட, மிஷ்கின் அவரது கையில் முத்தமிட்டார். அதேபோல், நாயகன் ஜெயம் ரவியையும் கட்டிப்பிடித்தார்.
இதையெல்லாம் பார்த்த நெட்டிசன்கள் கை கொடுத்தால் கோவிட் பரவும் என்றால் கட்டிப்பிடித்தால் மட்டும் கோவிட் பரவாதா ? பிரபலங்கள் என்றால் ஒரு மாதிரி.. சாதாரண நபர்கள் என்றால் வேறு மாதிரி நடத்துவதா.. ? இப்படி பொதுவெளியிலேயே பகிரங்கமாக நடந்து கொள்ளலாமா என்று தங்களது விமர்சனத்தை கடுமையாக வெளிப்படுத்தி வருகின்றனர்.