தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! | ‛மதராஸி' படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக திட்டமிடும் படக்குழு! | கமல் படத்தில் நடிக்கும் வாய்ப்பினை தவறவிட்ட நாயகிகள்! | கணவரை பிரிந்து வாழ்கிறாரா ஹன்சிகா? | ‛‛அப்செட் ஆனால் இதை செய்வேன்'': ரகசியம் சொன்ன கீர்த்தி சுரேஷ் | தரன் தரும் தரமான இலக்கியம் | பிளாஷ்பேக்: காலம் கடந்தும் பேசப்படும் காவியப் படைப்பு “கண்ணகி” |
பிக்பாஸ் சீசன் 8 இறுதிகட்டத்தை எட்டிய நிலையில் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. பல போட்டியாளர்கள் அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ள சூழலில் தற்போது டப் போட்டியாளராக மக்களால் பெரிதும் விரும்ப பெற்ற மஞ்சரி எலிமினேட் ஆகி இருக்கிறார். இது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்து மிகவும் அருமையாக விளையாடி வந்த மஞ்சரிக்கு ஆரம்பம் முதலே பிக்பாஸ் கருணை காட்டவில்லை.
இதற்கிடையில் டாப் 5 போட்டியாளர்களில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட அவர் தற்போது வெளியேறி இருக்கிறார். மஞ்சரி வெளியேறும் போது தன் மகனுக்காக டிராபியை உடைக்காமல் கொண்டு செல்ல பிக்பாஸிடம் அனுமதி கேட்டார். ஆனால், அதை பிக்பாஸ் மறுத்துவிடவே மஞ்சரி கணத்த இதயத்துடன் டிராபியை உடைத்துவிட்டு வெளியேறினார். இதனையடுத்து பிக்பாஸை விமர்சித்தும் கண்டித்தும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.