கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

நடிப்பு, இசை, தயாரிப்பு, இயக்கம் என பன்முகம் காட்டி வருகிறார் விஜய் ஆண்டனி. நடிப்பு தாண்டி இசை நிகழ்ச்சிகளையும் இவர் நடத்தி வருகிறார். சென்னையில் 'விஜய் ஆண்டனி 3.0' என்ற பெயரில் இன்று(டிச., 28) ஏஎம் ஜெயின் கல்லூரி மைதானத்தில் இவரின் இசை நிகழ்ச்சி நடைபெறவிருந்தது. ஆனால் காவல்துறையின் அறிவுரையின் பேரில் இந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி விஜய் ஆண்டனி வெளியிட்ட பதிவில், ‛‛வணக்கம் நண்பர்களே. சில எதிர்பாராத காரணங்களாலும், தற்போது சென்னையில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் அரசு அதிகாரிகள் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் இன்று நடைபெறவிருந்த விஜய் ஆன்டனி 3.0 இசை நிகழ்ச்சி வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இதனால் உங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு மிகவும் வருத்தப்படுகிறேன். புதிய நிகழ்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் புரிதலுக்கு நன்றி. புதிய நிகழ்வு பிரம்மாண்டமாக இருக்கும்'' என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கடந்தாண்டு சென்னையில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் நடத்திய இசை நிகழ்ச்சியில் பல்வேறு குளறுபடிகள், போக்குவரத்து நெரிசல் என சர்ச்சையானது. அதையெல்லாம் கருத்தில் கொண்டு இந்த நிகழ்ச்சி ரத்தாகி உள்ளதாக கூறப்படுகிறது.