எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
கத்தாரில் சிக்டா விருதுகள் இந்த வருடம் டிசம்பர் 20ம் தேதி கத்தாரின் புகழ்பெற்ற கத்தார் தேசிய மாநாட்டு மையத்தில் (QNCC) பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியானது சிக்டா நிறுவனர் மற்றும் இயக்குநரான சாதிக் பாஷா மிக விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலத்தில் உள்ள கத்தார் வாழ் ஆளுமைகளை இவ்விருதுகள் 8 பிரிவுகளில் கவுரவித்தன. மேலும் இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, தென்னிந்திய திரையுலகின் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவை பிரபல நடிகை குஷ்பூ, நகைச்சுவை நட்சத்திரம் யோகி பாபு, கன்னட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், பல்துறை திறமை கொண்ட நடிகர்கள் அசார் மற்றும் டி.எஸ்.கே, நடிகை அம்மு ராமச்சந்திரன், நடிகை சுமலதா, நடிகர் விமல், விசுவநாத், மற்றும் குணச்சித்திர நடிகர் ரியாஸ் கான் ஆகியோரின் வருகையால் நிகழ்ச்சியானது தனிச்சிறப்பை பெற்றது.
இந்த நிகழ்வில் 2500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து, விழாவை சிறப்பித்தனர். தென்னிந்தியர்களின் கலாச்சார மற்றும் கலை நடைமுறைகளைக் கொண்டாடும் சிக்டா விருதுகள், வளர்ந்து வரும் திறமைகளை ஊக்குவிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக திகழ்கிறது.