எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
ராயன் படத்திற்கு பின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி உள்ளார் தனுஷ். இப்படம் வெளியாகும் முன்பே அடுத்தப்படியாக ‛இட்லி கடை' என்ற படத்தை இயக்கி, நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு வளர்ந்து வருகிறது. இதைத்தொடர்ந்து பல படங்கள் தனுஷ் கைவசம் உள்ளது. இதில் அடுத்து எந்த படத்தில் தனுஷ் நடிப்பார் என்பது சினிமா வட்டாரத்தில் கேள்வியாக அமைந்துள்ளது.
இந்நிலையில் ‛இட்லி கடை' படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ‛போர் தொழில்' பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார் என்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்தில் துவங்குகிறது. தற்போது இதற்கான முன் தயாரிப்பு பணிகளில் விக்னேஷ் ராஜா கவனம் செலுத்தி வருகிறார்.