எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் |
ராயன் படத்திற்கு பின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி உள்ளார் தனுஷ். இப்படம் வெளியாகும் முன்பே அடுத்தப்படியாக ‛இட்லி கடை' என்ற படத்தை இயக்கி, நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு வளர்ந்து வருகிறது. இதைத்தொடர்ந்து பல படங்கள் தனுஷ் கைவசம் உள்ளது. இதில் அடுத்து எந்த படத்தில் தனுஷ் நடிப்பார் என்பது சினிமா வட்டாரத்தில் கேள்வியாக அமைந்துள்ளது.
இந்நிலையில் ‛இட்லி கடை' படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ‛போர் தொழில்' பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார் என்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்தில் துவங்குகிறது. தற்போது இதற்கான முன் தயாரிப்பு பணிகளில் விக்னேஷ் ராஜா கவனம் செலுத்தி வருகிறார்.