ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'அமரன்' படம் மூலம் 300 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்ற சிவகார்த்திகேயன் தற்போது சில ஹீரோக்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு டாப் 5 இடத்தைப் பிடித்துவிட்டதாக வினியோகஸ்தர்களே தெரிவிக்கிறார்கள். ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் அவர் இருக்கிறார் என்கிறார்கள்.
'அமரன்' படம் தந்த வெற்றி, வசூலை அடுத்து தன்னுடைய அடுத்த படங்களுக்கான சம்பளத்தை அவர் அதிரடியாக உயர்த்திவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடிக்க உள்ள 'புறநானூறு' படத்திற்காக 50 கோடி சம்பளம் என்றும், அடுத்து 'டான்' படத்தை இயக்கிய சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ள படத்திற்கு 60 கோடி சம்பளம் என்றும் சொல்கிறார்கள்.
300 கோடி வரை அதிகபட்ச வியாபாரம் 100 கோடி மினிமம் கியாரண்டி வியாபாரம் என்று சிவகார்த்திகேயனுக்கு இருப்பதால் அவருடைய சம்பள உயர்வு சரியானதே என்பது கோலிவுட் தகவல்.