இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
'அமரன்' படம் மூலம் 300 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்ற சிவகார்த்திகேயன் தற்போது சில ஹீரோக்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு டாப் 5 இடத்தைப் பிடித்துவிட்டதாக வினியோகஸ்தர்களே தெரிவிக்கிறார்கள். ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் அவர் இருக்கிறார் என்கிறார்கள்.
'அமரன்' படம் தந்த வெற்றி, வசூலை அடுத்து தன்னுடைய அடுத்த படங்களுக்கான சம்பளத்தை அவர் அதிரடியாக உயர்த்திவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடிக்க உள்ள 'புறநானூறு' படத்திற்காக 50 கோடி சம்பளம் என்றும், அடுத்து 'டான்' படத்தை இயக்கிய சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ள படத்திற்கு 60 கோடி சம்பளம் என்றும் சொல்கிறார்கள்.
300 கோடி வரை அதிகபட்ச வியாபாரம் 100 கோடி மினிமம் கியாரண்டி வியாபாரம் என்று சிவகார்த்திகேயனுக்கு இருப்பதால் அவருடைய சம்பள உயர்வு சரியானதே என்பது கோலிவுட் தகவல்.