டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஒரே பாகமாக ரீ ரிலீஸ் ஆகும் பாகுபலி |
காதலித்து திருமணம் செய்து கொண்ட அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் நட்சத்திர தம்பதிக்கு ஆரத்யா என்ற மகள் இருக்கிறார். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விரைவில் விவாகரத்து செய்யப் போவதாகவும் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக சோசியல் மீடியாவில் ஒரு வதந்தி பரவி வந்தது. குறிப்பாக, ஆனந்த் அம்பானி திருமணத்தில் ஐஸ்வர்யாராயும், அபிஷேக் பட்சனும் தனித்தனியே கலந்து கொண்டதால் அந்த வதந்தி மேலும் காட்டுத்தீயாக பரவியது. ஆனபோதிலும் அதற்கு அவர்கள் தொடர்ந்து மறுத்து வந்தார்கள்.
இப்படியான நிலையில்தான் கடந்த ஐந்தாம் தேதி மும்பையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் ஜோடியாக கலந்து கொண்டுள்ளார்கள். அப்போது தங்களது குடும்பத்தாருடன் செல்பி எடுத்துள்ளார் ஐஸ்வர்யாராய். இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி அவர்களின் விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.