தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள படம் புஷ்பா-2. இந்த படம் டிசம்பர் 5ம் தேதியான நாளை திரைக்கு வருகிறது. இப்படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் பின்னர் இந்த படத்திற்கு பின்னணி இசை அமைக்கும் பொறுப்பை சாம் சி.எஸ்க்கு புஷ்பா-2 படக் குழு வழங்கியது.
இந்நிலையில் அது குறித்து சாம் சி.எஸ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டு உள்ளார். அந்த பதிவில், புஷ்பா- 2 படத்திற்கு பின்னணி இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அனுபவத்தை கொடுத்திருக்கிறது. இந்த படத்திற்கு எனக்கு இப்படி ஒரு அற்புதமான வாய்ப்பை கொடுத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன், இயக்குனர் சுகுமார் ஆகியோருக்கு நன்றி. அல்லு அர்ஜுன் படத்திற்கு பின்னணி இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய உற்சாகத்தை அளித்தது. எனது திரையுலக பயணத்தில் இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. இந்த படத்தில் அதிரடியான சண்டைக் காட்சிகளும், கிளைமாக்ஸ்சிலும் பணியாற்றியது ஒரு தனித்துவமான அனுபவமாக அமைந்தது என்று தெரிவித்திருக்கிறார் சாம் சி.எஸ்.