மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு | இருமனம் ஒருமனமான தருணம்... : 2025ல் கெட்டிமேளம் கொட்டிய திரைப்பிரபலங்கள்...! | பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “பொண்ணுக்கு தங்க மனசு” |

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள படம் புஷ்பா-2. இந்த படம் டிசம்பர் 5ம் தேதியான நாளை திரைக்கு வருகிறது. இப்படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் பின்னர் இந்த படத்திற்கு பின்னணி இசை அமைக்கும் பொறுப்பை சாம் சி.எஸ்க்கு புஷ்பா-2 படக் குழு வழங்கியது.
இந்நிலையில் அது குறித்து சாம் சி.எஸ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டு உள்ளார். அந்த பதிவில், புஷ்பா- 2 படத்திற்கு பின்னணி இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அனுபவத்தை கொடுத்திருக்கிறது. இந்த படத்திற்கு எனக்கு இப்படி ஒரு அற்புதமான வாய்ப்பை கொடுத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன், இயக்குனர் சுகுமார் ஆகியோருக்கு நன்றி. அல்லு அர்ஜுன் படத்திற்கு பின்னணி இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய உற்சாகத்தை அளித்தது. எனது திரையுலக பயணத்தில் இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. இந்த படத்தில் அதிரடியான சண்டைக் காட்சிகளும், கிளைமாக்ஸ்சிலும் பணியாற்றியது ஒரு தனித்துவமான அனுபவமாக அமைந்தது என்று தெரிவித்திருக்கிறார் சாம் சி.எஸ்.