மோகன்லாலின் நகை விளம்பரத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய கேரள போலீஸ் | நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஸ்வேதா மேனன் | மோகன்லால் பட ரீமேக்கில் நடிக்க விரும்பி இயக்குனரை நச்சரிக்கும் பஹத் பாசில் | கடவுள் சிவனாக நடித்து வம்பு இழுக்கிறாரா நடிகர் மன்சூர் அலிகான் | என் மீதான காழ்ப்புணர்ச்சி : ‛டிக் டாக்' இலக்கியா விவகாரத்தில் திலிப் பதில் | 'ஸ்கூல் கட்' அடித்து 'பாட்ஷா' பார்த்த பஹத் பாசில் | 'தலைவன் தலைவி' தெலுங்கு ரிலீஸ் : ஆகஸ்ட் 1க்கு தள்ளி வைப்பு | 250 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | வார் 2 டிரைலர் : 24 மணி நேரத்தில் 50 மில்லியன் பார்வைகள் | 'ரட்சகன்' பார்த்து நாகார்ஜுனா ரசிகரான லோகேஷ் கனகராஜ் |
பாலிவுட்டின் பிரபல நட்சத்திர தம்பதி அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய். இவர்களுக்கு 13 வயது ஆரத்யா பச்சன் என்கிற பெண் குழந்தை இருக்கிறது. சமீப வருடங்களாகவே ஐஸ்வர்யா ராய்க்கும் அபிஷேக் பச்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு என்றும் இவர்கள் இருவரும் விவகாரத்து பெற்று பிரியப் போகிறார்கள் என்றும் அவ்வபோது செய்திகள் அடிபடுவதும் பிறகு இருவரும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டு அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் தொடர்கதையாக இருக்கிறது.
அப்படித்தான் சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தன் பெயருடன் இணைந்து இருக்கும் பச்சன் என்கிற வார்த்தையை நீக்கி விட்டார் என்றும் அதனால் மீண்டும் கணவன் மனைவி இருவரும் விவாகரத்தை நோக்கி நகர்கிறார்கள் என்றும் கூட புதிய வதந்தி ஒன்று கிளம்பியது. இதுபோன்று பல நட்சத்திர தம்பதிகள் இப்படி தங்களின் பெயரின் பின்னால் உள்ள கணவனின் பெயரையோ அல்லது அவரது குடும்பத்தின் பெயரையோ நீக்கிய பின்பு அப்படி அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்ததும் திரையுலகில் நடந்துதான் இருக்கிறது.
அதனால் கடந்த இரண்டு மூன்று நாட்களாக ஐஸ்வர்யா ராய் விஷயத்திலும் அது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் தனது மகளின் 13வது பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளனர் ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் தம்பதியினர். ஆனால் ஐஸ்வர்யா ராய் இந்த நிகழ்வு குறித்து பகிர்ந்து கொண்ட புகைப்படங்கள் எதிலுமே அபிஷேக் பச்சன் இடம்பெறவில்லை. இதனால் ஏற்கனவே பரவி வந்த வதந்தி உண்மைதான் என்பது போலவும் பேசத் துவங்கி விட்டனர்.
ஆனால் நல்ல வேலையாக தொடர்ந்து ஆரத்யா பச்சனின் பிறந்த நாள் நிகழ்வை பதிமூன்று வருடங்களாக நடத்தி வரும் தனியார் நிறுவனம் தாங்கள் இந்த நிகழ்வு குறித்து தங்களது வலைதள பக்கத்தில் இரண்டு வீடியோக்களை வெளியிட்டு இருந்தனர். அந்த இரண்டு வீடியோக்களிலுமே அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உடன் சேர்ந்து தனது மகளின் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய காட்சிகள் இடம் பெற்று இருந்தன. ஒரு வழியாக தற்போது இந்த வதந்தியும் முடிவுக்கு வந்துள்ளது என இந்த இருவர் மீதும் அபிமானம் கொண்ட ரசிகர்கள் பெருமூச்சு விடுகின்றனர்.