நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா | இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் | இதைவிட பெருமை என்ன இருக்கு : முதல்வர் சந்திப்பு குறித்து நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் மிருணாள் தாக்கூர் | 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது | இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் அனுஷ்கா | முருகதாஸ், சிவகார்த்திகேயன் இரண்டு பேருக்கும் மதராஸி முக்கியம் | 'த காலர்' பிரிட்டிஷ் படத்தின் காப்பியா 'ஹவுஸ்மேட்ஸ்'? | 'ஐமேக்ஸ்' ரிலீஸ் இல்லாத 'கூலி': ரசிகர்கள் வருத்தம் |
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல் முறையாக தமிழில் ஒரு படத்தை இயக்குகிறார். இதனை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக பல மாதங்களுக்கு முன் அறிவித்தனர். ஆனால் அதன் பிறகு இப்படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த படத்தில் நடிப்பது தொடர்பாக சில நடிகர்களின் பெயர்கள் வெளியாகின. இறுதியாக சந்தீப் கிஷன் நடிப்பதாக தகவல் வந்தது.
இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்க சந்தீப் கிஷன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக இன்று(நவ., 29) அறிவித்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக மோசன் போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.
'நீங்கள் இழந்ததை அதே இடத்தில் தேடுங்கள்' என்ற மையக்கருவை சுற்றிதான் இந்த படம் நகரும். பார்வையாளர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் புதிய அனுபவத்தைக் கொடுக்கும். ஜனவரி 2025-ல் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்கிறார் லைகா நிறுவனத்தின் ஜிகேஎம் தமிழ் குமரன்.