என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் |

தற்போது தமிழில் தக்லைப், விடாமுயற்சி, குட் பேட் அக்லி மற்றும் தெலுங்கு, மலையாளத்திலும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் திரிஷா. மேலும் சமீபகாலமாக படப்பிடிப்பு இல்லை என்றால் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் திரிஷா, சமீபத்தில் தான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஜப்பானுக்கு சென்று இருப்பதாக அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டிருக்கிறார் திரிஷா. அந்த பதிவில், 'நம்மை மனமுடைய செய்தவரிடத்தில் நெருங்கிய நட்புடன் பழகும் ஒருவருடன் நாம் பழகக் கூடாது' என்று அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார் திரிஷா. யாரை இப்படி அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது தெரியவில்லை. என்றாலும், ஏதோ சொந்த வாழ்க்கையில் தான் பாதிக்கப்பட்ட விஷயத்தைதான் அவர் இப்படி பதிவிட்டுள்ளார் என்பது தெரிகிறது.