300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
தொடர்ந்து பல பிரபலங்களின் விவகாரத்து அதிகரித்து வருவதைப் பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது ஆஸ்கர் விருதை வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு, நேற்றிரவு திடீரென அறிவித்து அதிர்ச்சியடைய வைத்தார். அடுத்த சில மணிநேரத்தில் ஏ.ஆர்.ரஹ்மானும் இருவரும் பிரிவதாக சமூக வலைதளத்தில் அறிவித்தார்.
ரஹ்மான் வெளியிட்ட பதிவில், ''திருமண வாழ்வில் 30 ஆண்டுகளை தொட்டுவிடுவோம் என நம்பினோம். ஆனால் எதிர்பாராமல் இப்படி ஒரு முடிவு வந்துவிட்டது. கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தால் நடுங்கக்கூடும். உடைந்த துண்டுகள் மீண்டும் சேரவில்லை என்றாலும் நாங்கள் அதன் அர்த்தத்தை தேடுகிறோம். இதை நாங்கள் கடந்த செல்ல எங்களின் தனிப்பட்ட விஷயங்களுக்கு மரியாதை தரும் நண்பர்களின் அன்புக்கு நன்றி'' எனப் பதிவிட்டுள்ளார்.
அதிலும், அவருடைய பதிவின் முடிவில் #arrsairaabreakup என்ற ஹேஸ்டேக் உடன் முடித்திருந்தார். திரை பிரபலங்களின் விவாகரத்து பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து விட்டதாக ரசிகர்கள் கவலைப்பட்ட நேரத்தில், அந்த பிரிவு செய்தியிலும் ஹேஸ்டேக் பயன்படுத்தி இருப்பதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
'ஏ.ஆர். ரஹ்மான் தனது பிரிவினை அறிவிப்பதற்காக ஹேஷ்டேக்கை உருவாக்கிய ஆண்டாக 2024 வரலாற்றில் இடம்பிடிக்கும்' என ஒரு பயனர் கிண்டலடிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார். ஒரு சிலர், அவருடைய எக்ஸ் தளத்தை நிர்வகிப்பவர் இந்த பதிவை போட்டாரோ எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.