திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா | மம்முட்டி பட இயக்குனருக்கு வெற்றியை தருவாரா சவுபின் சாஹிர் ? | 10 நாள் அவகாசத்துடன் மீண்டும் ஆரம்பமான கன்னட பிக்பாஸ் 12 | விஜய்க்கு பவன் கல்யாண் ஆலோசனை சொன்னாரா? | ஏஆர் முருகதாஸை வறுத்தெடுத்த சல்மான் கான் | காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! |
கன்னட நடிகர் சிவராஜ் குமார் கன்னட சினிமாவில் உச்ச நடிகராக வலம் வந்தாலும் சமீபகாலமாக தமிழில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளார். ரஜினியின் ஜெயிலர், தனுஷின் கேப்டன் மில்லர் படங்களை தொடர்ந்து தமிழில் அடுத்து வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் 69வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என சமீபத்தில் சிவராஜ் குமார் ஒரு நேர்காணலில் தெரிவித்தார். அதேசமயம் கால்ஷீட்டை பொருத்து நான் நடிப்பது உறுதியாகும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இப்போது அளித்த பேட்டியில், "சில தினங்களுக்கு முன்பு வினோத்தை சந்தித்து விஜய் படத்தில் நடிப்பது சாத்தியமில்லை. விரைவில் நல்ல கதையுடன் வேறொரு படத்தில் சந்திப்போம் என்று கூறிவிட்டேன்" என தெரிவித்துள்ளார் சிவராஜ் குமார்".