நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
லக்னோ: கங்குவா பட நடிகையான திஷா பதானியின் தந்தையிடம், அரசுத் துறையில் உயர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் கடந்த 14ம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் பிரபல ஹிந்தி நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ளார். இது இவரின் முதல் தமிழ் படமாகும்.
திஷா பதானியின் தந்தை ஜெகதீஷ் சிங் பதானி ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., ஆவார். இவரை தொடர்பு கொண்ட ஒரு கும்பல், தங்களுக்கு பிரபல அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், ரூ.25 லட்சம் கொடுத்தால், அரசு அமைக்கும் ஆணையங்களின் தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட உயர் பதவிகளை பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதனை நம்பி, ஜெகதீஷ் சிங் பதானி ரூ.5 லட்சத்தை ரொக்கமாகவும், ரூ.20 லட்சத்தை 3 வெவ்வேறு வங்கிக் கணக்கிலும் அனுப்பியுள்ளார். 3 மாதங்களாகியும் எந்த தகவலும் வராததால், தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த ஜெகதீஷ், போலீஸில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில், ஷிவேந்த்ரா பிரதாப் சிங், திவாகர் கார்க், ஆச்சார்யா ஜெயபிரகாஷ், ப்ரீத்தி கார்க் மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.