தனது உயிர் சென்னையில் பிரிய வேண்டும் என்று பேசியிருந்த சரோஜா தேவி | புதிய போட்டி வந்தாலும், சம்பளத்தை உயர்த்திய அனிருத் | தங்கள் தனிப்பட்ட சண்டையை மேடையில் பேசிய விஜய் சேதுபதி, பாண்டிராஜ் | ரவுடி சோடா பாபுவாக மாறிய அல்போன்ஸ் புத்திரன் | கமலை தொடர்ந்து நான்கு வேடங்களில் நடிக்கும் அல்லு அர்ஜுன் | எம்ஜிஆர் உடன் 26 ; சிவாஜி உடன் 22 படங்கள் : தமிழ் சினிமாவை கலக்கிய ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜா தேவி | துக்க வீட்டில் செல்பி எடுக்க முயன்ற ரசிகரை நெட்டி தள்ளிவிட்ட ராஜமவுலி | பயணம் எளிதல்ல! ; மங்காத்தா நடிகைக்கு அஜித் சொன்ன அட்வைஸ் | பழம்பெரும் நடிகையான ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜாதேவி காலமானார் | சுரேஷ்கோபி படத்துக்கு ஒரு வழியாக யு/ஏ சான்றிதழ் கொடுத்த சென்சார் |
சமீபத்தில் ‛கங்குவா' படத்தின் எடிட்டரான நிஷாத் யூசுப் மரணித்த நிலையில் இப்போது மற்றொரு தமிழ் பட எடிட்டர் காலமானார். அவரது பெயர் உதய சங்கர். உடல் நலக்குறைவால் இவரது உயிர் பிரிந்தது. தமிழ் சினிமாவில் 46 படங்களுக்கு மேல் படத்தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். குறிப்பாக ஆர்கே செல்வமணியின் ஆஸ்தான எடிட்டர்களில் இவரும் ஒருவர் என்றே சொல்லலாம்.
ஆர்கே செல்வமணி இயக்கத்தில் பிரசாந்த் நடித்த ‛செம்பருத்தி' படத்தில் படத்தொகுப்பாளராக பணியாற்றியதன் மூலம் பிரபலமானார். தொடர்ந்து அவரின் ராஜ முத்திரை, மக்கள் ஆட்சி, அரசியல், குற்றப்பத்திரிக்கை போன்ற படங்களிலும் பணியாற்றினார். இதுதவிர பொண்டாட்டி ராஜ்ஜியம், ராஜாளி, புருஷன் பொண்டாட்டி என ஏராளமான படங்களுக்கு எடிட்டராக பணியாற்றி உள்ளார்.
இவரது சொந்த ஊர் சேலம். அவரது இறுதிச்சடங்கு நாளை அங்கு நடைபெற உள்ளது.