சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
நடிகர் ரஞ்சித்தும், நடிகை பிரியா ராமனும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இடையில் சில காலம் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். ரஞ்சித் நடிகை ராகசுதாவை 2வது திருமணம் செய்தார். பின்னர் அவரை விட்டு பிரிந்தார்.
தற்போது 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ரஞ்சித் தனது மூத்த மகன் ஆதித்யா ஆடிசம் பாதித்த குழந்தை என்பதை கண்ணீருடன் தெரிவித்தார். இதுவரை வெளி உலகம் அறியாத இந்த விஷயம் தெரியவந்தபோது எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் தனது மகன் ஆதித்யா குறித்து பிரியா ராமன் கூறியிருப்பதாவது:
ஆதித்யாவை நாங்கள் ஒரு பிரச்னையாகப் பார்க்கவில்லை. நான் ஆதித்யா அம்மா என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். இதுபோன்ற மகனை வீட்டில் வளர்ப்பது என்பது சவாலான விஷயம். ஆதித்யாவுக்கு ஆட்டிசம் என்று சொன்னபோது, ‛நீ என்ன தவறு செய்தாய்? உனக்கு இப்படி ஒரு தண்டனை கிடைத்திருக்கிறது' என்று, ஆறுதல் சொல்வதாக நினைத்து என்னிடம் சிலர் சொல்வார்கள். நானும் வருத்தப்பட்டு அழுதிருக்கிறேன் என்றாலும், இதுதான் என்பதை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்த பிறகு பல விஷயங்கள் புரிந்தது.
கடவுள் என்னை நம்பி, என்னிடம் அந்தக் குழந்தையைக் கொடுத்திருக்கிறார். என் மீது கடவுளுக்கு அவ்வளவு நம்பிக்கை என்று தோன்றியது. ரஞ்சித்தின் நிறைய குணங்கள் ஆதித்யாவிடம் இருக்கிறது. மிகவும் பாசமான, அன்பான மகன். நாங்கள் சோகமாக இருந்தால், உடனே வந்து கட்டிப்பிடிப்பான். நான் இருக்கிறேன் என்ற பாதுகாப்பு உணர்வைக் கொடுப்பான். அவன் எங்களின் அன்புக் குழந்தை. அவனுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டப்படுவோம்.
அவனது பயணத்தில்தான் எங்களது பயணமும் இணைந்திருக்கிறது. நான் எங்கே சென்றாலும் ஆதித்யாவையும் அழைத்துச் செல்வேன். மியூசிக், ஸ்போர்ட்ஸ் எல்லாம் அவனுக்கு மிகவும் பிடிக்கும். தனக்குப் பிடித்ததை சந்தோஷமாக செய்து கொண்டிருக்கிறான். எங்கள் வாழ்க்கையும் சந்தோஷமாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.