காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
கடந்த 2012ம் ஆண்டு ஜீவா நடிப்பில் மிஷ்கின் இயக்கிய முகமூடி என்ற படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. மும்பை நடிகையான இவருக்கு அதன்பிறகு தமிழில் பட வாய்ப்புகள் இல்லை. அதனால் தெலுங்கு, ஹிந்தியில் தொடர்ந்து நடித்து வந்தவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். விஜய்யுடன் 69வது படம், சூர்யாவின் 44 வது படம் மற்றும் ஹிந்தியில் சாகித் கபூருடன் நடிக்கும் படம் என ஐந்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார் பூஜா ஹெக்டே.
இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், நான் நடிக்கும் ஒவ்வொரு படங்களின் கதாபாத்திரங்களை உணர்ந்து சிறப்பாகவே நடிக்கிறேன். என்றாலும் பல சமயங்களில் அந்த படங்கள் தோல்வி அடைந்து விடுகிறது. ஆனால் படங்களின் தோல்வியை பார்த்து ஒருபோதும் நான் கவலைப்பட்டதில்லை. என்னுடைய வேலையை சரியாக செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அந்த வகையில் நான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் எனது கதாபாத்திரத்தில் 100% நடிப்பை வெளிப்படுத்துகிறேன். அதன் வெளிப்பாடாகத்தான் நடித்த படங்கள் தோல்வி அடைந்தபோதும் என் திறமை மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து இயக்குனர்கள் எனக்கு பட வாய்ப்புகளை கொடுத்து வருகிறார்கள். இப்போதும் என் கைவசம் ஐந்து மெகா படங்கள் இருப்பதற்கு காரணமே என் திறமை மீது இயக்குனர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைதான் என்று கூறியிருக்கிறார் பூஜா ஹெக்டே.