விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
கடந்த 2012ம் ஆண்டு ஜீவா நடிப்பில் மிஷ்கின் இயக்கிய முகமூடி என்ற படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. மும்பை நடிகையான இவருக்கு அதன்பிறகு தமிழில் பட வாய்ப்புகள் இல்லை. அதனால் தெலுங்கு, ஹிந்தியில் தொடர்ந்து நடித்து வந்தவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். விஜய்யுடன் 69வது படம், சூர்யாவின் 44 வது படம் மற்றும் ஹிந்தியில் சாகித் கபூருடன் நடிக்கும் படம் என ஐந்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார் பூஜா ஹெக்டே.
இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், நான் நடிக்கும் ஒவ்வொரு படங்களின் கதாபாத்திரங்களை உணர்ந்து சிறப்பாகவே நடிக்கிறேன். என்றாலும் பல சமயங்களில் அந்த படங்கள் தோல்வி அடைந்து விடுகிறது. ஆனால் படங்களின் தோல்வியை பார்த்து ஒருபோதும் நான் கவலைப்பட்டதில்லை. என்னுடைய வேலையை சரியாக செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அந்த வகையில் நான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் எனது கதாபாத்திரத்தில் 100% நடிப்பை வெளிப்படுத்துகிறேன். அதன் வெளிப்பாடாகத்தான் நடித்த படங்கள் தோல்வி அடைந்தபோதும் என் திறமை மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து இயக்குனர்கள் எனக்கு பட வாய்ப்புகளை கொடுத்து வருகிறார்கள். இப்போதும் என் கைவசம் ஐந்து மெகா படங்கள் இருப்பதற்கு காரணமே என் திறமை மீது இயக்குனர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைதான் என்று கூறியிருக்கிறார் பூஜா ஹெக்டே.