எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
இந்திய சினிமாவில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு எதிர்பார்க்கப்படும் இரண்டு படங்களாக இருப்பவை தமிழ்ப்படமான 'கங்குவா', தெலுங்குப் படமான 'புஷ்பா 2'. இந்த இரண்டு படங்களின் வெளியீட்டுத் தேதிகளை ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள்.
'கங்குவா' படம் நவம்பர் 14ம் தேதியும், 'புஷ்பா 2' படம் டிசம்பர் 6ம் தேதியும் வெளியாக உள்ளது. இரண்டு படங்களையுமே பான் இந்தியா வெளியீடாக பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படத்தை டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் எனத் தகவல் வெளியானது. இப்படத்தின் வெளியீடு பற்றி இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக இப்படத்தை 2025 பொங்கலுக்கு வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயத்தில் ராம் சரணின் அப்பா சிரஞ்சீவி நடித்துள்ள 'விஷ்வம்பரா' படத்தையும் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.
ஒரு வேளை 'கேம் சேஞ்சர்' படம் பொங்கல் வெளியீடு என்றால் மகனுக்காக 'விஷ்வம்பாரா' படத்தை சிரஞ்சீவி தள்ளி வைப்பாரா என்ற கேள்வியும் டோலிவுட்டில் எழுந்துள்ளது.