300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
எழுத்தாளர்கள் இயக்குனராவது இப்போது சகஜம். ஆனால் அந்தக் காலத்தில் எழுத்தாளர்கள் சினிமாவை கடுமையாக எதிர்த்தார்கள். சினிமாவே பார்க்க மாட்டேன் என்று சில எழுத்தாளர்களும், சினிமாவுக்கு பாடல் எழுத மாட்டேன் என்று சில எழுத்தாளர்களும் வாழ்ந்து முடிந்தார்கள். ஆனால் இவற்றுக்கு இடையில் அன்றைக்கு பிரபலமாக இருந்த எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்பு இயக்குனராகவும், நடிகராகவும் இருந்தார்.
கொத்தமங்கல் சுப்பு எழுதிய 'தில்லானா மோகனாம்பாள்' என்ற தொடர்தான் அதே பெயரில் திரைப்பட காவியம் ஆனது. இதுதவிர பந்தலூர் பாமா, பொன்னி வனத்து பூங்குயில், ராவ் பஹதூர் உள்ளிட்ட பல நாவல்களை எழுதினார். 100க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதினார்.
1935ம் ஆண்டில் கே.சுப்பிரமணியம் இயக்கிய 'பட்டினத்தார்' படத்தின் மூலம் நடிகர் ஆனார். பின்னர் சந்திரமோகனா, மைனர் ராஜாமணி, அனாதைப் பெண், அதிர்ஷ்டம், திருநீலகண்டர், சாந்த சக்குபாய், அடங்காப்பிடாரி, கச்ச தேவயானி, மதனகாமராஜன், தாசி அபரஞ்சி போன்ற படங்களில் நடித்தார்.
1945ம் ஆண்டில் 'கண்ணம்மா என் காதலி' என்ற படத்தை இயக்கினார். இதன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் அனைத்தையும் சுப்புவே எழுதியிருந்தார். 1947ல் 'மிஸ் மாலினி' படத்தை இயக்கி, அதில் தானே கதாநாயகனாக நடித்தார். 1953ம் ஆண்டில் 'அவ்வையார்' என்ற மெகா பட்ஜெட் படத்தையும் இயக்கி வெற்றி கண்டார்.