இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
எழுத்தாளர்கள் இயக்குனராவது இப்போது சகஜம். ஆனால் அந்தக் காலத்தில் எழுத்தாளர்கள் சினிமாவை கடுமையாக எதிர்த்தார்கள். சினிமாவே பார்க்க மாட்டேன் என்று சில எழுத்தாளர்களும், சினிமாவுக்கு பாடல் எழுத மாட்டேன் என்று சில எழுத்தாளர்களும் வாழ்ந்து முடிந்தார்கள். ஆனால் இவற்றுக்கு இடையில் அன்றைக்கு பிரபலமாக இருந்த எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்பு இயக்குனராகவும், நடிகராகவும் இருந்தார்.
கொத்தமங்கல் சுப்பு எழுதிய 'தில்லானா மோகனாம்பாள்' என்ற தொடர்தான் அதே பெயரில் திரைப்பட காவியம் ஆனது. இதுதவிர பந்தலூர் பாமா, பொன்னி வனத்து பூங்குயில், ராவ் பஹதூர் உள்ளிட்ட பல நாவல்களை எழுதினார். 100க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதினார்.
1935ம் ஆண்டில் கே.சுப்பிரமணியம் இயக்கிய 'பட்டினத்தார்' படத்தின் மூலம் நடிகர் ஆனார். பின்னர் சந்திரமோகனா, மைனர் ராஜாமணி, அனாதைப் பெண், அதிர்ஷ்டம், திருநீலகண்டர், சாந்த சக்குபாய், அடங்காப்பிடாரி, கச்ச தேவயானி, மதனகாமராஜன், தாசி அபரஞ்சி போன்ற படங்களில் நடித்தார்.
1945ம் ஆண்டில் 'கண்ணம்மா என் காதலி' என்ற படத்தை இயக்கினார். இதன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் அனைத்தையும் சுப்புவே எழுதியிருந்தார். 1947ல் 'மிஸ் மாலினி' படத்தை இயக்கி, அதில் தானே கதாநாயகனாக நடித்தார். 1953ம் ஆண்டில் 'அவ்வையார்' என்ற மெகா பட்ஜெட் படத்தையும் இயக்கி வெற்றி கண்டார்.