என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் | குற்றத்தை நிரூபித்தால் கணவரை பிரிய தயார்: அடுக்கடுக்கான கேள்விகளுடன் ஜானி மாஸ்டர் மனைவி சவால் | மொழி இல்லம் : புது வீடு கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் மிருணாளினி ரவி | நான் ரொம்ப சின்ன பொண்ணுங்க : பவி டீச்சர் பிரிகிடா விளக்கம் | எல்.சி.யு.வில் இணையும் ராகவா லாரன்ஸ் | கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் பட வில்லன் | பிளாஷ்பேக் : எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குனர் சிவாஜியை வைத்து எடுத்த ஒரே படம் | ஓடிப்போனவளா? ஷகிலாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் | பைனான்சியல் திரில்லர் படத்தில் பிரியா பவானி சங்கர் |
தெலுங்குத் திரையுலகத்தில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நடன இயக்குனர் ஜானி மீதான பாலியல் குற்றச்சாட்டு. 21 வயதே ஆன நடனப் பெண் ஒருவர் கொடுத்த புகார் காரணமாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது. தெலுங்கு பிலிம் சேம்பர் அவரை சஸ்பெண்ட் செய்தது.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து ஜானி மாஸ்டர் தலைமறைவானார். ஆனால் அவர் கோவாவில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஜானியின் மனைவி இவ்விவகாரம் குறித்து அதிரடியாக கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக ஜானியின் மனைவி சுமலதா என்ற ஆயிஷா அளித்த பேட்டி: ஜானி மீது பாலியல் புகார் கொடுத்த பெண், சிறுமியாக இருந்தபோது மேடை நிகழ்ச்சிகளில் நடனமாடினார். அப்போது சினிமா துறையால் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு ஆசைப்பட்டார். பிறகு ஜானி மாஸ்டரிடம் வேலைக்கு சேர்ந்து உதவி நடன இயக்குநராக வேலை பார்த்துவந்தார். ஐதராபாத்தில் இருக்கும் திரைப்பட அசோசேஷியனில் உறுப்பினராக சேர்வதற்குகூட பணம் கட்ட முடியாமல் இருந்தார். அப்போது ஜானிதான் அந்தப் பெண்ணுக்கு பண உதவி செய்தார்.
தான் சிறந்த நடன அமைப்பாளராக வர வேண்டும் அல்லது ஹீரோயினாக வேண்டும் என்று அப்பெண் ஆசைப்பட்டார். இதனால் ஜானி தான் பணியாற்றும் படங்களில் அந்தப் பெண்ணுக்கு வாய்ப்புகளை வழங்கினார். இப்போது அவர் மீதே அந்தப் பெண் பாலியல் புகார் கொடுத்திருக்கிறார். மைனராக அந்தப் பெண் இருந்தபோது மும்பையில் நடந்த சம்பவத்துக்கு ஆதாரம் இருக்கிறதா?
அவர்கள் இரண்டு பேரும் நெருக்கமாக இருந்தார்கள் என்பதை நேரில் யாராவது பார்த்திருக்கிறார்களா? அப்போதே ஏன் அந்தப் பெண் வெளியே சொல்லவில்லை? பாலியல் தொல்லைக்கு உள்ளானால் அப்பெண் ஏன் ஜானியிடம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்? அதுமட்டுமின்றி ஜானி மாஸ்டரிடம் பணியாற்றுவது அதிர்ஷ்டம் என்று ஏன் கூறினார்? புகார் அளித்த பெண் என் கணவரால் துன்புறுத்தலுக்கு உள்ளானதை நிரூபித்தால், நான் உடனடியாக அவரை விட்டு விலகவும் தயாராக உள்ளேன். இவ்வாறு சவால் விடுக்கும் வகையில் ஜானியின் மனைவி கூறியுள்ளார்.