சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
அயோக்யா, வேலன், இரவின் நிழல், கருடன் மற்றும் இன்று திரைக்கு வந்துள்ள கோழிப்பண்ணை செல்லத்துரை என பல படங்களில் நடித்தவர் பிரிகிடா. அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், தன்னை 30 வயது நிரம்பிய நடிகை என்று பலரும் கருதுவதாக ரொம்பவே பீல் பண்ணி உள்ளார். மேலும், பவி டீச்சர் வேடத்தில் நான் நடித்த போது எனக்கு 19 வயது தான். அப்போது கல்லூரியில் தான் படித்துக் கொண்டிருந்தேன். அதையடுத்து நான் நடித்த வேடமெல்லாம் மெச்சூரிட்டியாக இருந்ததால் அந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ப என்னை மாற்றிக் கொண்டு நடித்ததால் அனைவருமே எனக்கு வயது அதிகம் இருக்கு என்று நினைக்கிறார்கள். இப்போது சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்துள்ள கோழிப்பண்ணை செல்லத்துரை படத்தில் தான் என் வயதுக்கு ஏற்ற வேடத்தில் நான் நடித்திருக்கிறேன். இனி இதுபோன்று இளமையான வேடங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பேன் என்கிறார் பிரிகிடா.