பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் |
தமிழ் சினிமாவின் டாப் வரிசை நடிகர்களின் பட்டியலில் இடம் பெற கொஞ்சம் கொஞ்சமாக முயன்று வருகிறார் சிவகார்த்திகேயன். அஜித், விஜயகாந்த், விஜய் ஆகியோருக்கு திருப்புமுனையான படங்களைக் கொடுத்த ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 23வது படம் ஆரம்பமாகி நடந்து வந்தது.
இந்நிலையில் சல்மான் கான் நடிக்க ஒரு ஹிந்திப் படத்தை இயக்கும் வாய்ப்பு ஏஆர் முருகதாஸுக்கு வந்தது. 'சிக்கந்தர்' எனப் பெயரிடப்பட்ட அந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டாராம் ஏஆர் முருகதாஸ்.
அடுத்தடுத்து சில முக்கிய படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ள சிவகார்த்திகேயனுக்கு தன்னுடைய 23வது படத்தை திட்டமிட்டபடி முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. 'சிக்கந்தர்' படத்தின் படப்பிடிப்புடன் தன் படத்தின் படப்பிடிப்பையும் நடத்துவார் முருகதாஸ் என எதிர்பார்த்து சிவகார்த்திகேயன் ஏமாந்துவிட்டார் என்கிறார்கள் கோலிவுட்டில்.
தற்போதைய நிலவரப்படி 'சிக்கந்தர்' படத்தை முடித்த பின்புதான் சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பை மீண்டும் நடத்த முருகதாஸ் வர உள்ளார் என்று கிசுகிசுக்கிறார்கள். முன்னணி சீனியர் நடிகர்கள் நடிக்க மறுத்த நிலையில் தான் நடிக்க சம்மதித்தற்கு இதுதான் பரிசா என சிவகார்த்திகேயன் தரப்பு கோபப்பட்டுள்ளதாம்.