ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆக்ஷன் ஹீரோயின்கள் இருந்திருக்கிறார்கள். விஜயலலிதா முதல் விஜயசாந்தி வரை ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது. ஆனால் இப்போது எல்லா ஹீரோயின்களுமே ஆக்ஷன் ஹீரோயின்கள் தான்.
தமிழ் சினிமாவின் முதல் ஆக்ஷன் ஹீரோயின் எஸ்.டி.சுப்புலட்சுமி, புராணபடங்களிலும், பக்தி படங்களிலும், சரித்திர படங்களிலும் நடித்து வந்த எஸ்.டி.சுப்புலட்சுமி 'நவீன சதாராம்' என்ற படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்தார். சதாராம் என்ற டைட்டில் கேரக்டரில் நடித்த சுப்புலட்சுமி ஆண் வேடமிட்டு பல சாகசங்களை செய்பவராக நடித்திருந்தார். அவரது வீர தீர செயல்களை பார்த்து அந்த நாட்டு இளவரசிக்கு காதல் வரும். அவர் ஆண் என்பது தெரியாமல் காதலிப்பார். ஆனால் சதாராம் இளவரசனை காதலிப்பார். இதற்கு இடையில் திருடன் ஒருவரும் சதாராமை காதலிப்பார். இப்படி போகும் கதையின் முடிவு என்ன என்பது கிளைமாக்ஸ்.
இந்த படத்தை கே.சுப்ரமணியம் இயக்கி இருந்தார். வித்வான் சங்கரலிங்கம் இளவரசனாகவும், பட்டு அய்யர் திருடனாகவும், கே.கே.பார்வதி பாய் இளவரசியாகவும் நடித்திருந்தனர். பாபநாசம் சிவன் இசை அமைத்திருந்தார். 1935ம் ஆண்டு வெளியான இந்த படம் 'சதாராமே' என்ற பிரபலமான கன்னட நாடகத்தின் ரீமேக் ஆகும்.