சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆக்ஷன் ஹீரோயின்கள் இருந்திருக்கிறார்கள். விஜயலலிதா முதல் விஜயசாந்தி வரை ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது. ஆனால் இப்போது எல்லா ஹீரோயின்களுமே ஆக்ஷன் ஹீரோயின்கள் தான்.
தமிழ் சினிமாவின் முதல் ஆக்ஷன் ஹீரோயின் எஸ்.டி.சுப்புலட்சுமி, புராணபடங்களிலும், பக்தி படங்களிலும், சரித்திர படங்களிலும் நடித்து வந்த எஸ்.டி.சுப்புலட்சுமி 'நவீன சதாராம்' என்ற படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்தார். சதாராம் என்ற டைட்டில் கேரக்டரில் நடித்த சுப்புலட்சுமி ஆண் வேடமிட்டு பல சாகசங்களை செய்பவராக நடித்திருந்தார். அவரது வீர தீர செயல்களை பார்த்து அந்த நாட்டு இளவரசிக்கு காதல் வரும். அவர் ஆண் என்பது தெரியாமல் காதலிப்பார். ஆனால் சதாராம் இளவரசனை காதலிப்பார். இதற்கு இடையில் திருடன் ஒருவரும் சதாராமை காதலிப்பார். இப்படி போகும் கதையின் முடிவு என்ன என்பது கிளைமாக்ஸ்.
இந்த படத்தை கே.சுப்ரமணியம் இயக்கி இருந்தார். வித்வான் சங்கரலிங்கம் இளவரசனாகவும், பட்டு அய்யர் திருடனாகவும், கே.கே.பார்வதி பாய் இளவரசியாகவும் நடித்திருந்தனர். பாபநாசம் சிவன் இசை அமைத்திருந்தார். 1935ம் ஆண்டு வெளியான இந்த படம் 'சதாராமே' என்ற பிரபலமான கன்னட நாடகத்தின் ரீமேக் ஆகும்.