ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
சில நாட்களுக்கு முன்பு மலையாள திரையுலகம் குறித்து வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் சமயத்தில் தாங்கள் இந்த துறையில் ஆண்களிடம் சந்தித்த கசப்பான பாலியல் அனுபவங்கள் குறித்து கூறி வருகின்றனர். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் குரல் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் திரையுலகில் தனது அனுபவம் எப்படி இருக்கிறது என்று கூறியுள்ளார். தமிழில் விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை, இறுகப்பற்று உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.
இது குறித்து சமீபத்தில் அவர் கூறும்போது, “சினிமாவில் இது போன்ற கசப்பான அனுபவங்கள் எதையும் நான் சந்தித்ததில்லை. அதே சமயம் மற்றவர்கள் சந்திக்கவில்லை என்றும் நான் சொல்லவில்லை. ஆனால் சினிமாவை தாண்டி வெளியே குறிப்பாக நான் ஏதாவது நிகழ்ச்சியை முடித்துவிட்டு காரில் வீட்டுக்கு செல்லும்போது அதன் டிரைவர் என்னை எந்தவிதமாக பார்க்கிறார் என்பதிலேயே எனது எண்ண ஓட்டம் தொடர்ந்து இருக்கும். என்னால் பல சமயங்களில் இயல்பாக அமர்ந்து பயணிக்க முடிந்ததில்லை” என்று கூறியுள்ளார். மேலும், ‛‛சினிமாவில் மேக்கப் பணி செய்யும் பெண்கள் சேலைகளை அணிவிக்கும் பெண்கள் ஆகியோருக்கு கழிவறை வசதிகள் கூட சுத்தமாக இல்லை, இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும்'' என்றும் கூறியுள்ளார்.