ஜி.பி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? | சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு |
சில நாட்களுக்கு முன்பு மலையாள திரையுலகம் குறித்து வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் சமயத்தில் தாங்கள் இந்த துறையில் ஆண்களிடம் சந்தித்த கசப்பான பாலியல் அனுபவங்கள் குறித்து கூறி வருகின்றனர். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் குரல் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் திரையுலகில் தனது அனுபவம் எப்படி இருக்கிறது என்று கூறியுள்ளார். தமிழில் விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை, இறுகப்பற்று உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.
இது குறித்து சமீபத்தில் அவர் கூறும்போது, “சினிமாவில் இது போன்ற கசப்பான அனுபவங்கள் எதையும் நான் சந்தித்ததில்லை. அதே சமயம் மற்றவர்கள் சந்திக்கவில்லை என்றும் நான் சொல்லவில்லை. ஆனால் சினிமாவை தாண்டி வெளியே குறிப்பாக நான் ஏதாவது நிகழ்ச்சியை முடித்துவிட்டு காரில் வீட்டுக்கு செல்லும்போது அதன் டிரைவர் என்னை எந்தவிதமாக பார்க்கிறார் என்பதிலேயே எனது எண்ண ஓட்டம் தொடர்ந்து இருக்கும். என்னால் பல சமயங்களில் இயல்பாக அமர்ந்து பயணிக்க முடிந்ததில்லை” என்று கூறியுள்ளார். மேலும், ‛‛சினிமாவில் மேக்கப் பணி செய்யும் பெண்கள் சேலைகளை அணிவிக்கும் பெண்கள் ஆகியோருக்கு கழிவறை வசதிகள் கூட சுத்தமாக இல்லை, இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும்'' என்றும் கூறியுள்ளார்.