சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது பொது குழு கூட்டம் இன்று (செப்.,8) காலை 10 மணி அளவில் ஆரம்பமானது. இதில் சென்னை மற்றும் பல ஊர்களிலிருந்து நடிகர் நடிகைகள், நாடக நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர். நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் 2025 பிப்ரவரியுடன் முடிவடைய உள்ள நிலையில், அதனை மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பொருளாளர் கார்த்தி பேசுகையில், ‛‛நடிகர் சங்கம் கட்டடம் கட்டுவது நின்ற நிலையில், விலைவாசி உயர்வு காரணமாக நிதிச்சுமை அதிகரித்துள்ளது. நடிகர் சங்கத்தின் கடனை அடைக்க கலைநிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கலை நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் சேர்ந்து பங்கேற்பதாக உறுதியளித்தனர். நடிகர் விஜய் கடனாக இல்லாமல் நிதியாக ஒரு கோடி ரூபாய் அளித்துள்ளார்'' என்றார்.
கேரள திரையுலகை உலுக்கிவரும் ஹேமா கமிட்டியின் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்த அறிக்கை தமிழ் திரையுலகிலும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், ‛பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகங்களில் பேசவேண்டாம்' என விசாகா கமிட்டி தலைவர் நடிகை ரோகிணி வலியுறுத்தினார்.




