நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு |
'பாகுபலி 2' படத்தின் வெற்றிக்குப் பிறகுதான் 'பான் இந்தியா' என்ற வார்த்தை திரையுலகிலும் ரசிகர்களிடத்திலும் அதிகம் பரவியது. ஆனால், தமிழில் இதுவரை முழுமையான ஒரு பான் இந்தியா படம் வெளியாகவில்லை. 'கங்குவா' தான் அப்படியான சாதனையை ஏற்படுத்தப் போகும் முதல் படம் என்கிறார்கள்.
பான் இந்தியா என்பது முழுமையான விதத்தில் வெளியாக வேண்டும். தமிழில் இதுவரை பான் இந்தியா என்று சொல்லப்பட்ட படங்கள் ஹிந்தியில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் வெளியாகவேயில்லை. அதற்குக் காரணம் ஓடிடி வியாபார உரிமை. வட இந்தியாவில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் சங்கத்தினர் தியேட்டர்களில் ஒரு படம் வெளியான எட்டு வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடியில் வெளியிட வேண்டும். அதற்குக் குறைவான வாரங்களில் வெளியிட ஒப்பந்தம் செய்தால் அந்தப் படங்களை மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் திரையிட அனுமதிப்பதில்லை.
மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் முழுமையாக வெளியிடப்படாத காரணத்தால்தான் தமிழ்ப் படங்கள் பலவும் வட இந்தியாவில் வசூலைக் குவிக்க முடிவதில்லை. தெலுங்கில் தயாராகும் படங்கள் அந்த எட்டு வார இடைவெளிக்கு சம்மதித்து படங்களை மல்டிபிளக்ஸ் தியேட்டர்களிலும் வெளியிட வைத்து அதிக வசூலைக் குவிக்கிறார்கள்.
சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள 'கங்குவா' படத்தை மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் வெளியிடும் விதத்தில் எட்டு வார இடைவெளியில்தான் ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் தியேட்டர்களில் வெளியான நான்கு வாரங்களுக்குப் பிறகு அப்படம் ஓடிடியில் வெளியாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாம். இத்தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தைச் சேர்ந்த சிஇஓ தனஞ்செயன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
எனவே 'கங்குவா' படம் ஒரிஜனல் பான் இந்தியா படமாக வெளியாகி அதிக வசூலைக் குவிக்க வாய்ப்புள்ளது.