பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
தமிழில் ‛நேரம், ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்காஹ்' என சில படங்களில் மட்டுமே நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நஸ்ரியா. அதன்பிறகு பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் உடன் திருமணம் முடிந்த பின்னர் நடிப்பிலிருந்து விலகி இருந்தார். அதன் பின்னர் மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வந்த நஸ்ரியா தமிழ் சினிமாவில் மட்டும் நடிக்கவில்லை.
தற்போது பல வருடங்களுக்கு பிறகு தமிழில் வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகின்றார். ஆனால், இது படம் அல்ல வெப் தொடர். இந்த வெப் தொடரில் நஸ்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சாந்தனு நடிக்கிறார். இதனை டைரக்டர் ஏ.எல்.விஜய் தயாரிக்கிறார். சூர்யா பிரதாப் இயக்குகிறார் .
இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் இப்போது கிடைத்த புதிய தகவலின் படி, 1940களின் பின்னனியில் இதன் கதைகளம் நடைபெறுகிறதாம். உண்மை கதையான லஷ்மிகாந்தன் கொலை வழக்கு கதையை பின்பற்றி இந்த தொடர் உருவாகிறது. இதில் தியாகராஜர் பாகவதர் கதாபாத்திரத்தில் நட்டி நட்ராஜ் நடித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். நஸ்ரியா வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.