ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் நாளை(செப்., 5) உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்களில், வெளிநாடுகளில் முன்னதாகவே காட்சிகள் நடைபெறுகின்றன. அதிகாலை சிறப்புக் காட்சிகளும் வெளிமாநிலங்களில் நடக்க உள்ளன.
தமிழகத்தில் அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்குவதை கடந்த வருடம் முதல் நிறுத்திவிட்டார்கள். தற்போது காலை 9 மணிக்கு மட்டுமே சிறப்புக் காட்சிகளை நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. கோட் தயாரிப்பு நிறுவனம் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு அரசிடம் மனு அளித்து இருந்தது.
இந்நிலையில் படம் வெளியாகும் நாளை ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. பொதுவாக காலை காட்சிகள் 10:30 மணிக்கு மேல் தான் துவங்கும். நாளை மட்டும் காலை 9 மணிக்கே காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை ஒருநாள் மட்டும் 5 காட்சிகள் திரையிட்டு கொள்ளலாம் காலை 9 மணிக்கு துவங்கி நள்ளிரவு 2 மணிக்குள் காட்சிகளை முடிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக ஏஜிஎஸ் தரப்பில் இரண்டு நாட்கள் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது அரசு ஒரு நாளைக்கு அனுமதி வழங்கி உள்ளது.