மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் நாளை(செப்., 5) உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்களில், வெளிநாடுகளில் முன்னதாகவே காட்சிகள் நடைபெறுகின்றன. அதிகாலை சிறப்புக் காட்சிகளும் வெளிமாநிலங்களில் நடக்க உள்ளன.
தமிழகத்தில் அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்குவதை கடந்த வருடம் முதல் நிறுத்திவிட்டார்கள். தற்போது காலை 9 மணிக்கு மட்டுமே சிறப்புக் காட்சிகளை நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. கோட் தயாரிப்பு நிறுவனம் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு அரசிடம் மனு அளித்து இருந்தது.
இந்நிலையில் படம் வெளியாகும் நாளை ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. பொதுவாக காலை காட்சிகள் 10:30 மணிக்கு மேல் தான் துவங்கும். நாளை மட்டும் காலை 9 மணிக்கே காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை ஒருநாள் மட்டும் 5 காட்சிகள் திரையிட்டு கொள்ளலாம் காலை 9 மணிக்கு துவங்கி நள்ளிரவு 2 மணிக்குள் காட்சிகளை முடிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக ஏஜிஎஸ் தரப்பில் இரண்டு நாட்கள் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது அரசு ஒரு நாளைக்கு அனுமதி வழங்கி உள்ளது.