அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சில வாரங்களுக்கு முன்பு நடிகர் தனுஷை வைத்து படம் தயாரிக்கப் போகிறவர்கள் சங்கத்தை அணுக வேண்டும் என்று கேட்டுக் கொண்டு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்கள். தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்று அதற்கேற்றபடி நடிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசப்பட்டது.
இதனிடையே, நேற்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தினருடன், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் சிலர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட சில முக்கிய சங்கங்கள் அடங்கிய கூட்டுக் கூட்டத்தின் முடிவுப்படி நவம்பர் 1 முதல் நடத்த உத்தேசித்துள்ள திரைப்பட வேலை நிறுத்த அறிவிப்பு பற்றியும் விவாதித்துள்ளார்களாம்.
நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்றைய பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளார்கள். அதில் சிலவற்றிற்குத் தீர்வு கண்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அதன்படி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி தயாரிப்பில் தனுஷ் படம் நடித்துத் தர சம்மதிப்பதாக தனுஷ் சொல்லிவிட்டார் என்கிறார்கள்.
அவரது தயாரிப்பில் தனுஷ் இயக்கம் நடிப்பில் சரித்திரப் படம் ஒன்று சில வருடங்களுக்கு முன்பு ஆரம்பமானது. நாகார்ஜூனா உள்ளிட்டவர்களும் அதில் நடித்து வந்த நிலையில் படம் திடீரென நிறுத்தப்பட்டது. இப்போது அப்படத்திற்குப் பதிலாக புதிய கதை ஒன்றில் நடித்துத் தருகிறேன் என தனுஷ் சொன்னதால் அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதாம். மற்ற சில தயாரிப்பாளர்களிடம் தனுஷ் வாங்கிய அட்வான்ஸ் குறித்தும் பேசினார்களாம். அவற்றிற்கு என்ன தீர்வு என்பது விரைவில் தெரிய வருமாம்.
நேற்றைய முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததால் இரண்டு பக்கமும் மகிழ்ச்சி என்கிறார்கள். எனவே, வேலை நிறுத்தப் பற்றிய அறிவிப்புகளை பேச்சு வார்த்தைகளின் மூலம் முடிவுக்குக் கொண்டு வரவும் இரு தரப்பிலும் இறங்கி வந்துள்ளதாகத் தெரிகிறது.