மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற வெற்றி படங்களைக் தொடர்ந்து தற்போது இரண்டு குழந்தை நட்சத்திரங்களை வைத்து 'வாழை' எனும் படத்தை இயக்கியுள்ளார். இதில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இது மாரி செல்வராஜ்-ன் இளம் வயதில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கியுள்ளனர்.
ஏற்கனவே இந்த படத்தை பார்த்த பல திரைப் பிரபலங்கள் பாராட்டி வந்தனர். இந்த நிலையில் இன்று திரைக்கு வரும் வாழை திரைப்படத்தை பார்த்து நடிகர் தனுஷ் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்தி பதிவிட்டுள்ளார். அதன்படி, "சிரிக்கவும், கைத்தட்டவும், அழுகுவதற்கும் தயாராக இருங்கள். உங்களைக் கலங்கடிக்கச் செய்யும் உலகத்திற்குள் நுழைய தயாராக இருங்கள். உலகமெங்கும் உள்ள சினிமா ரசிகர்கள் கொண்டாடப்படும் அழகான படமாக வாழை உருவாகியுள்ளது. மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவிற்கு வாழ்த்துகள்", என பதிவிட்டுள்ளார்.