நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்தவாரம் வெளியான படம் ‛தங்கலான்'. கோலார் தங்க வயல் பின்னணியில் இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது. ரஞ்சித் படம் என்றாலே அதில் ஏதாவது ஒரு சர்ச்சை எழும். அந்தவகையில் இந்த படத்திலும் சர்ச்சை இருப்பதாக கூறி ரஞ்சித் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வக்கீல் பொற்கொடி என்பவர் புகார் அளித்துள்ளார்.
அதில், தங்கலான் படத்தில் புத்த மதத்தை உயர்வாக காட்ட, வைணவ மதத்தை இழிவுப்படுத்தும் விதமான காட்சிகள் இருப்பதாகவும், அதை படத்திலிருந்து நீக்க வேண்டும் என கூறி ரஞ்சித் மீது புகார் தெரிவித்துள்ளார். மேலும் படத்தில் உள்ள சர்ச்சை காட்சிகளை நீக்காவிட்டால் வழக்கு தொடருவேன் என குறிப்பிட்டுள்ளார்.