'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
சினிமாவில் பெரிய வெற்றி பெற்ற காமெடி நடிகர்கள் காலத்தை கடந்தும் பேச வைப்பார்கள். ஆனால் சின்ன சின்ன கேரக்டரில் பெரிதாக சிரிக்க வைத்துச் சென்ற காமெடியன்களை சினிமா மறந்து விடும். அப்படியானவர்களில் ஒருவர்தான் என்னத்த கண்ணையா.
இன்றைய தலைமுறைக்கு அவரை அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் 'தொட்டால் பூ மலரும்' படத்தில் வடிவேலுவுக்கு கார் டிரைவராக வந்து 'வரும் ஆனா... வராது' என்ற டயலாக் மூலம் புகழ்பெற்றாரே அவர் தான் என்னத்த கண்ணையா. அந்த காலத்திலேயே எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் காமெடியனாக நடித்தவர். எம்.ஜி.ஆருக்கு பிடித்த காமெடியனாக இருந்தார். இதனால் தனது படங்களில் ஒரு காட்சியாவது கொடுத்து கை நிறைய சம்பளமும் கொடுப்பார். பின்னாளில் கலைமாமணி பட்டமும் கொடுத்தார்.
1949ல் பி.யு.சின்னப்பா, எம்ஜிஆர் இணைந்து நடித்த 'ரத்னகுமார்' படத்தில் கூட்டத்தில் ஒருவராக வந்தார் கண்ணையா. இதுதான் அவர் அறிமுகமான படம். 1950ல் வெளியான 'ஏழை படும் பாடு' படத்தில் சிறிய வேடம் ஒன்றில் நடித்து தன்னை அடையாளப்படுத்தினார். 1955ல் இருந்து சென்னைக்கு வந்து நிரந்தரமாகத் தங்கினார்.
இவர் பெயருக்கு முன்னால் 'என்னத்த' வந்தது தனி கதை. 1967ல் ரவிச்சந்திரன் நடிப்பில் வெளியான படம் 'நான்'. இந்தப்படத்தில் கண்ணையா எதற்கெடுத்தாலும் விரக்தியாக “என்னத்த வந்து... என்னத்த போயி...”ன்னு சொல்லிக்கொண்டே இருப்பார். இதுதான் அவரது பெயர் காரணமானது.