மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
சூர்யா நடிப்பில் தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் அறிவிக்கப்பட்ட படம் ‛வாடிவாசல்'. ஆனால் சில காரணங்களால் இதன் படப்பிடிப்பு தாமதம் ஆகிக் கொண்டே போகிறது. இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தயாரிப்பாளர் தாணு வாடிவாசல் பற்றிய கேள்விக்கு பதிலளித்தார்.
அவர் கூறுகையில், “கடந்த மாதம் நானும், வெற்றிமாறனும், சூர்யாவும் இணைந்து வாடிவாசல் படத்தின் பணிகளை குறித்து பேசினோம். தற்போது இப்படத்துக்கான வேலைகளை தொடங்கியுள்ளோம். இதற்காக மதுரையில் அலுவலகம் அமைந்துள்ளோம். 3 நாட்கள் படப்பிடிப்பு எடுத்து இதில் இருக்கும் கஷ்டத்தை உணர்ந்தோம். இதையடுத்து லண்டனில் உள்ள ஜூராசிக் பார்க் படத்தை எடுக்க உறுதுணையாக இருந்த கலைஞர் ஒருவரிடம் பேசியுள்ளோம். அதற்காக தான் காலதாமதம் ஆகி வருகிறது. வேறு எந்த பிரச்சனைகளும் இல்லை” என்றார்.