ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி மற்றும் பலர் நடிக்கும் 'தங்கலான்' படம் நாளை(ஆக., 14) வெளியாக உள்ளது. பாலா இயக்கத்தில் வந்த 'சேது' படம் விக்ரமிற்கும், பாலா இயக்கத்தில் வந்த 'நந்தா' படம் சூர்யாவுக்கும் தமிழ் சினிமா உலகில் அவர்களது பயணத்திற்கு மிகப் பெரும் திருப்புமுனையாக அமைந்த படங்கள். அதற்கடுத்து விக்ரம், சூர்யா இருவரும் பாலா இயக்கத்தில் வெளிவந்த 'பிதாமகன்' படத்தில் இணைந்து நடித்தார்கள்.
அதன் பின் விக்ரம், சூர்யா இடையே சில தனிப்பட்ட காரணங்களால் பிரிவு ஏற்பட்டது. இருவரும் பேசிக் கொள்வதும் கிடையாது. இந்நிலையில் சூர்யாவின் உறவினரான கேஈ ஞானவேல் ராஜா தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படம் பற்றிய அறிவிப்பு வந்த போது திரையுலகினர் ஆச்சரியப்பட்டார்கள்.
கடந்த வாரம் நடைபெற்ற 'தங்கலான்' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். நாளை வெளியாக உள்ள படத்திற்கு தற்போது சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். படக்குழுவினரை டேக் செய்து 'தங்கலான்… இந்த வெற்றி மிகப் பெரியதாக இருக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.