சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி மற்றும் பலர் நடிக்கும் 'தங்கலான்' படம் நாளை(ஆக., 14) வெளியாக உள்ளது. பாலா இயக்கத்தில் வந்த 'சேது' படம் விக்ரமிற்கும், பாலா இயக்கத்தில் வந்த 'நந்தா' படம் சூர்யாவுக்கும் தமிழ் சினிமா உலகில் அவர்களது பயணத்திற்கு மிகப் பெரும் திருப்புமுனையாக அமைந்த படங்கள். அதற்கடுத்து விக்ரம், சூர்யா இருவரும் பாலா இயக்கத்தில் வெளிவந்த 'பிதாமகன்' படத்தில் இணைந்து நடித்தார்கள்.
அதன் பின் விக்ரம், சூர்யா இடையே சில தனிப்பட்ட காரணங்களால் பிரிவு ஏற்பட்டது. இருவரும் பேசிக் கொள்வதும் கிடையாது. இந்நிலையில் சூர்யாவின் உறவினரான கேஈ ஞானவேல் ராஜா தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படம் பற்றிய அறிவிப்பு வந்த போது திரையுலகினர் ஆச்சரியப்பட்டார்கள்.
கடந்த வாரம் நடைபெற்ற 'தங்கலான்' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். நாளை வெளியாக உள்ள படத்திற்கு தற்போது சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். படக்குழுவினரை டேக் செய்து 'தங்கலான்… இந்த வெற்றி மிகப் பெரியதாக இருக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.




