ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி மற்றும் பலர் நடிக்கும் 'தங்கலான்' படம் நாளை(ஆக., 14) வெளியாக உள்ளது. பாலா இயக்கத்தில் வந்த 'சேது' படம் விக்ரமிற்கும், பாலா இயக்கத்தில் வந்த 'நந்தா' படம் சூர்யாவுக்கும் தமிழ் சினிமா உலகில் அவர்களது பயணத்திற்கு மிகப் பெரும் திருப்புமுனையாக அமைந்த படங்கள். அதற்கடுத்து விக்ரம், சூர்யா இருவரும் பாலா இயக்கத்தில் வெளிவந்த 'பிதாமகன்' படத்தில் இணைந்து நடித்தார்கள்.
அதன் பின் விக்ரம், சூர்யா இடையே சில தனிப்பட்ட காரணங்களால் பிரிவு ஏற்பட்டது. இருவரும் பேசிக் கொள்வதும் கிடையாது. இந்நிலையில் சூர்யாவின் உறவினரான கேஈ ஞானவேல் ராஜா தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படம் பற்றிய அறிவிப்பு வந்த போது திரையுலகினர் ஆச்சரியப்பட்டார்கள்.
கடந்த வாரம் நடைபெற்ற 'தங்கலான்' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். நாளை வெளியாக உள்ள படத்திற்கு தற்போது சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். படக்குழுவினரை டேக் செய்து 'தங்கலான்… இந்த வெற்றி மிகப் பெரியதாக இருக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.