அழகுக்காக அறுவை சிகிச்சையா : ரகுல் ப்ரீத் சிங் பதில் | ''அவுரங்கசீப்புக்கு 2 அறை கொடுக்க வேண்டும்'' ; சூர்யா பட விழாவில் விஜய் தேவரகொண்டா காட்டம் | 'ஜன கன மன' 2ம் பாகம் இருக்கிறது ; உறுதிப்படுத்திய இயக்குனர் | பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி என்.காருண் மரணம் ; கேன்ஸ் விருது பெற்றவர் | 'பேமிலிமேன்-3' வெப்சீரிஸ் நடிகர் நீர்வீழ்ச்சியில் விழுந்து மரணம் | போதை மீட்பு மையத்திற்கு அனுப்பப்படும் வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ | ஜூலையில் திரைக்கு வரும் அனுஷ்காவின் காட்டி படம் | மகாராஜா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது | பிரசாந்த் நீல் - ஜூனியர் என்டிஆர் படம்: அடுத்தாண்டு ஜூன் 25ல் ரிலீஸ் | டிடி நெக்ஸ்ட் லெவல் டிரைலர் எப்போது? |
விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், சரத்குமார் நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் ‛மழை பிடிக்காத மனிதன்'. சஸ்பென்ஸ் திரில்லர் படமாக வெளியாகி உள்ளது. இந்த படத்தை பார்த்த விஜய் மில்டனுக்கு பேரதிர்ச்சி இருந்துள்ளது. அது என்ன என்பதை அவரே வெளியிட்ட வீடியோ பதிவில், ‛‛இந்த படத்தின் ஹீரோ யார், எங்கிருந்து வந்துள்ளான், ரவுடியா, அடியாளா, டாக்டரா என பல கேள்விகள் வைத்து தான் படத்தை உருவாக்கி இருந்தேன். ஆனால் படம் பார்க்கும்போது எனக்கே அதிர்ச்சியாகிவிட்டது. படத்தின் துவக்கத்தில் எனக்கே தெரியாமல் ஒரு நிமிட காட்சியை வைத்துள்ளனர். சென்சார் பண்ண ஒரு படத்தில் எப்படி இதுபோன்ற காட்சி வருகிறது. யார் இவர்களுக்கு இந்த உரிமையை தந்தது என தெரியவில்லை. அந்த ஒரு நிமிட காட்சியை மனதில் ஏற்றாமல் ரசிகர்கள் படத்தை பாருங்கள் என வேண்டுகோளாகவே வைக்கிறேன்'' என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.