அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படம் திரைக்கு வந்ததை அடுத்து புதுமுகங்களை வைத்து அவர் இயக்கி வரும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் அடுத்தகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைத்திருக்கும் ஜி.வி. பிரகாஷ் குமார் அப்படம் குறித்த ஒரு அறிவிப்பை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகிறது. இந்த பாடலை தனுஷ் பின்னணி பாடி இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இதேப்போல் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் தங்கலான். ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வரும் இந்த படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் குமாரே இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் அடுத்த சிங்கிள் பாடலும் விரைவில் வெளியாக இருப்பதாக இன்னொரு பதிவும் போட்டுள்ள ஜி.வி.பிரகாஷ்.