7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

ஸ்ரீவெற்றி இயக்கத்தில் அஸ்வின், அபர்ணதி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் ‛நாற்கரப்போர்'. சென்னையில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய இப்படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ‛‛அபர்ணதி நல்ல நடிகை, ஆனால் அவர் விழாவிற்கு வராதது வருத்தமே. இப்போதெல்லாம் நடிகைகள் புரமோஷனுக்கு வர மாட்டார்கள் என்பது தமிழ் சினிமாவில் சாபக்கேடாகவே மாறிவிட்டது. அபர்ணதியை இப்பட விழாவிற்கு நான் போனில் அழைத்தபோது அதற்கு தனியாக ரூ.3 லட்சம் தர வேண்டும் என்றார். மேலும் அவர் அருகில் யார் அமர வேண்டும் என்றெல்லாம் கண்டிஷன் போட்டார். அதையெல்லாம் நான் பேசினால் சர்ச்சையாகி விடும். 
பின்னர் ஓரிரு நாளில் தான் அப்படி பேசியதற்காக வருத்தம் தெரிவித்தவர் புரமோஷன் நிகழ்ச்சிக்கு வருகிறேன் என்றார். ஆனால் வரவில்லை. கேட்டால் நான் அவுட் ஆப் ஸ்டேஷன் என்று கூறிவிட்டார். அவர் அவுட் ஆப் ஸ்டேஷனிலேயே இருக்கட்டும். இப்படிப்பட்ட நடிகைகள் தேவையில்லை. அது தான் தமிழ் சினிமாவிற்கு நல்லது. தயாரிப்பாளர்களை காயப்படுத்தி விட்டு அவர்கள் சினிமாவிற்குள் வந்து என்ன நல்லது செய்யப் போகிறார்கள்'' என வருத்தத்துடன் பேசினார்.
டிவி நிகழ்ச்சியில் பிரபலமாகி பின்னர் ஜெயில், இறுகப்பற்று போன்ற படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் அபர்ணதி. வளர்ந்து வரும் நடிகையான இவர் இப்படி பேசியிருப்பது திரையுலகில் அவர் மீது அதிருப்தியையும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.