ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா |
சூர்யா - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாக வேண்டிய படம் 'புறநானூறு'. ஆனால், அப்படத்தில் சூர்யாவுக்குப் பதிலாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக கடந்த சில வாரங்களாகவே செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கான ஒப்பந்தம் கூட கையெழுத்தாகிவிட்டது என்கிறார்கள்.
இந்நிலையில் இப்படத்தைத் தயாரிக்கப் போவது யார் என்ற கேள்வியும் இருந்தது. தற்போது அது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயனின் நண்பரும், 'பிரின்ஸ், மாவீரன்' படங்களின் தயாரிப்பாளருமான அருண் விஷ்வா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் உறவினர் ரத்தீஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
படத்தை முதல் பிரதி அடிப்படையில் தனது சொந்த நிறுவனமான மீனாட்சி சினிமாஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கப் போகிறாராம் சுதா.
சிவகார்த்திகேயன் தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதற்கடுத்து 'டான்' இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ஒரு படத்திலும், வெங்கட்பிரபு இயக்க உள்ள ஒரு படத்திலும் நடிக்க ஏற்கெனவே ஒப்பந்தமாகியுள்ளார். அவற்றிற்கு முன்பாக சுதா இயக்க உள்ள 'புறநானூறு' படம் ஆரம்பமாகுமா என்பது இனிமேல்தான் தெரியும்.