மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தமிழ், தெலுங்கில் பிரபலமாக உள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங், ஹிந்தியிலும் முன்னணி நடிகையாக உள்ளார். கடந்த பிப்ரவரியில் தயாரிப்பாளர், நடிகர் ஜாக்கி பக்னானியை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து படங்களிலும் ரகுல் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தெலுங்கானாவில் போதை பொருள் விற்பனை செய்ததாக ரகுல் ப்ரீத் சிங் சகோதரர் அமன் ப்ரீத் சிங் உள்ளிட்ட 5 பேரை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 2.6 கி.கி. கோகைன் போதை பொருளை பறிமுதல் செய்தனர். மேலும் போதை பொருள் எங்கிருந்து கடத்தி கொண்டு வரப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தவிர அமன் ப்ரீத் சிங்கிடம் இருந்து கோகைன் போதை பொருளை வாங்க வந்த 30 பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.