‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் |
இந்தியாவின் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்வுகள் கடந்த சில நாட்களாக மும்பையில் நடந்தது. இந்திய அளவில் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பாலிவுட்டின் முக்கிய குடும்பமான அமிதாப்பச்சன் குடும்பத்தினரும் அதில் கலந்து கொண்டனர். நடிகர் அமிதாப் அவரது மனைவி ஜெயாபச்சன், மகன் அபிஷேக், மகள் ஸ்வேதா, மகள் வழி பேரன் அகஸ்திய நந்தா, பேத்தி நவ்யா நவேலி ஆகியோருடன் ஒன்றாக வந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர்.
அவர்கள் அங்கிருந்து அரங்கிற்குள் நுழைந்த சிறிது நேரம் கழித்து அமிதாப்பின் மருமகளும், மகன் அபிஷேக் பச்சனின் மனைவி ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா இருவர் மட்டும் தனியாக வந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர்.
இந்த விவகாரம் தற்போது அபிஷேக், ஐஸ்வர்யா ஆகியோரது பிரிவு பற்றிய சர்ச்சையை மீண்டும் ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளங்களிலும் பலரும் இது குறித்து பதிவிட்டு வருகிறார்கள்.
இப்படியான சர்ச்சை இதற்கு முன்பு வந்து பின்னர் அடங்கியது. இப்போது மீண்டும் எழுந்துள்ளது.