சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. சங்கத்தின் தலைவர் என்.முரளி ராமசாமி தலைமை தாங்கினார். சங்கத்தின் செயலாளர்கள் ஆர்.ராதாகிருஷ்ணன், எஸ்.கதிரேசன், துணைத்தலைவர் ஜி எம் தமிழ்குமரன், இணைச்செயலாளர் சவுந்தரபாண்டியன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
* தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கும் இடையே புரிந்துணர்வு வழிகாட்டுதல் ஒப்பந்தம் அமல்படுத்தப்பட வேண்டும்.
* சங்கத்தின் பரிந்துரை கடிதம் பெற்ற படப்பிடிப்புக்கு மட்டுமே, திரைப்பட தொழிலாளர்கள் தொழில் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
* படப்பிடிப்பு நடக்கும் தளங்களுக்கு 'ஸ்குவாட்' என்ற பெயரில் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் இருந்து யாரும் சென்று இடையூறு ஏற்படுத்தக்கூடாது. எந்த காரணத்தை கொண்டும் யாரும் படப்பிடிப்பை நிறுத்தக்கூடாது. எல்லா பிரச்சினைகளையும் பேசித் தீர்க்க வேண்டும்.
* தமிழ் சினிமாவில் உள்ள சில நடிகர்கள் மீது தயாரிப்பாளர்கள் அளித்த புகார்கள் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வருவதால் நடிகர் சங்க கவனத்துக்கு கொண்டு சென்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நடவடிக்கை எடுக்க வேண்டிய நடிகர்கள் யார்? யார்? என்ற விபரத்தை தீர்மானத்தில் குறிப்பிடவில்லை.