மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. சங்கத்தின் தலைவர் என்.முரளி ராமசாமி தலைமை தாங்கினார். சங்கத்தின் செயலாளர்கள் ஆர்.ராதாகிருஷ்ணன், எஸ்.கதிரேசன், துணைத்தலைவர் ஜி எம் தமிழ்குமரன், இணைச்செயலாளர் சவுந்தரபாண்டியன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
* தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கும் இடையே புரிந்துணர்வு வழிகாட்டுதல் ஒப்பந்தம் அமல்படுத்தப்பட வேண்டும்.
* சங்கத்தின் பரிந்துரை கடிதம் பெற்ற படப்பிடிப்புக்கு மட்டுமே, திரைப்பட தொழிலாளர்கள் தொழில் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
* படப்பிடிப்பு நடக்கும் தளங்களுக்கு 'ஸ்குவாட்' என்ற பெயரில் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் இருந்து யாரும் சென்று இடையூறு ஏற்படுத்தக்கூடாது. எந்த காரணத்தை கொண்டும் யாரும் படப்பிடிப்பை நிறுத்தக்கூடாது. எல்லா பிரச்சினைகளையும் பேசித் தீர்க்க வேண்டும்.
* தமிழ் சினிமாவில் உள்ள சில நடிகர்கள் மீது தயாரிப்பாளர்கள் அளித்த புகார்கள் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வருவதால் நடிகர் சங்க கவனத்துக்கு கொண்டு சென்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நடவடிக்கை எடுக்க வேண்டிய நடிகர்கள் யார்? யார்? என்ற விபரத்தை தீர்மானத்தில் குறிப்பிடவில்லை.