300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. சங்கத்தின் தலைவர் என்.முரளி ராமசாமி தலைமை தாங்கினார். சங்கத்தின் செயலாளர்கள் ஆர்.ராதாகிருஷ்ணன், எஸ்.கதிரேசன், துணைத்தலைவர் ஜி எம் தமிழ்குமரன், இணைச்செயலாளர் சவுந்தரபாண்டியன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
* தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கும் இடையே புரிந்துணர்வு வழிகாட்டுதல் ஒப்பந்தம் அமல்படுத்தப்பட வேண்டும்.
* சங்கத்தின் பரிந்துரை கடிதம் பெற்ற படப்பிடிப்புக்கு மட்டுமே, திரைப்பட தொழிலாளர்கள் தொழில் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
* படப்பிடிப்பு நடக்கும் தளங்களுக்கு 'ஸ்குவாட்' என்ற பெயரில் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் இருந்து யாரும் சென்று இடையூறு ஏற்படுத்தக்கூடாது. எந்த காரணத்தை கொண்டும் யாரும் படப்பிடிப்பை நிறுத்தக்கூடாது. எல்லா பிரச்சினைகளையும் பேசித் தீர்க்க வேண்டும்.
* தமிழ் சினிமாவில் உள்ள சில நடிகர்கள் மீது தயாரிப்பாளர்கள் அளித்த புகார்கள் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வருவதால் நடிகர் சங்க கவனத்துக்கு கொண்டு சென்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நடவடிக்கை எடுக்க வேண்டிய நடிகர்கள் யார்? யார்? என்ற விபரத்தை தீர்மானத்தில் குறிப்பிடவில்லை.