அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
'பீச்சாங்கை' கார்த்திக், மனிஷாஜித் மற்றும் பலர் நடிக்க உருவாகியுள்ள 'ஆர்யமாலா' என்ற படத்தின் இசை வெளியீடு இன்று மாலை நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் 'ஆர்யமாலா' என்னுடைய படம், தற்போது தயாரிப்பாளர், அவரையே இயக்குனர் என்று போட்டு படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளதாக வடலூர் ஆதிரை என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து பேஸ்புக்கில், “கடந்த 2017ல் "ஆண்டாள்"என்கிறப் பெயரில்... திரைப்பட நடிகர் "பீச்சாங்கை" கார்த்திக்,நடிகை மணிஷாஜித் ஆகியோரை நாயகன்,நாயகியாக கொண்டும்.... இயக்குனர் மாரிமுத்து, சிவசங்கர் மாஸ்டர், உஷா எலிசபெத், தவசி உள்ளிட்ட நடிகர், நடிகைகளை முக்கிய கதாபாத்திரங்களாகவும்… ஒளிப்திவாளர் ஜெய், இசையமைப்பாளர் செல்வநம்பி, படத்தொகுப்பாளர் "சகா" ஹரிஹரன், கலை இயக்குனர் சிவா, நடன இயக்குனர் தஸ்த்தா, சண்டை மிரட்டல் செல்வா-வீரா,தயாரிப்பு மேலாளர் ஹென்றிகுமார், மக்கள் தொடர்பு ஷேக் ஆகியோர் அடங்கிய படக்குழுவை வைத்து பெப்சி அமைப்பின் அனுமதியோடு தமிழ் திரைப்படத்தை இயக்கி முடித்தேன்.
அப்படம் தற்சமயம் "ஆர்யமாலா" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு தயாரிப்பாளரே இயக்குனர் எனும் பதிவோடு 08.07.2024 அன்று இசை மற்றும் டிரைலர் வெளியீடு நடைபெற உள்ளதாக அறிந்து வேதனை அடைந்தேன். ஊடக நண்பர்களும், பேஸ்புக் உறவுகளும், எழுத்தாளர்களும், கவிஞர்களும், சமூக செயற்பாட்டளர்களும் ஒரு படைப்பாளியாக எனது உரிமையை பாதுகாக்க துணை நிற்குமாறு அன்போடு வேண்டுகிறேன்,” எனப் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, இன்று மாலை நடைபெறுவதாக இருந்த 'ஆர்யமாலா' படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரைலர் வெளியீட்டை படக்குழுவினர் தள்ளி வைத்துள்ளனர்.