ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்து இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஆனவர் நடராஜன். இவரது வாழ்க்கை சினிமா ஆகிறது என்றும் அதில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்று தகவல்கள் வந்தது. பின்னர் அந்த தகவல்கள் அப்படியே மறைந்து போனது.
இந்த நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இதனை உறுதிப்படுத்தி உள்ளார் நடராஜன். இதுகுறித்து அவர் கூறும்போது "எனது கதையை சினிமாவாக எடுக்க சிவகார்த்திகேயன் தயாராக இருக்கிறார். நான் எப்போது கூப்பிட்டாலும் இதுகுறித்து பேச வரத் தயார் என்று சொல்லியிருக்கிறார். தற்போது நான் விளையாடிக் கொண்டிருக்கும் சீசன்கள் முடிந்த பிறகு அவரை சந்திப்பேன். அவரே தயாரிப்பதாகவும், நடிப்பதாகவும் கூறியிருக்கிறார்” என்கிறார். நடராஜன்.