‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், எஸ்ஜே சூர்யா, பிரியங்கா மோகன் மற்றும் பலர் நடிப்பில் 2022ல் வெளிவந்த படம் 'டான்'. அப்படம் வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்று 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
அப்படத்திற்குப் பிறகு அவர் இயக்கும் படம் பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. ரஜினிகாந்த், விஜய், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் ஆகியோரை சந்தித்து கதை சொன்னதாகச் சொன்னார்கள். ஆனால், எந்தப் படமுமே இறுதியாகவில்லை.
இந்நிலையில் மீண்டும் 'டான்' கூட்டணி இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சிபி சக்கரவர்த்தி, அனிருத், சிவகார்த்திகேயன், எஸ்ஜே சூர்யா ஆகியோர் மீண்டும் இணைய உள்ளார்களாம். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கப் போகிறாராம்.
விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த 'மகாராஜா' படத்தைத் தயாரித்த பேஷன் ஸ்டுடியோஸ் இப்படத்தைத் தயாரிக்க உள்ளதாம். எங்கெங்கோ சுற்றி வந்த சிபிக்கு கடைசியில் சிவகார்த்திகேயனே அடைக்கலம் கொடுத்துவிட்டார் என்பதுதான் கோலிவுட்டில் பேச்சாக உள்ளது.