மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
மலையாள இயக்குனர் சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அமலாபால் நடித்து 2018ல் வெளிவந்த படம் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. அந்தப் படத்தில் அரவிந்த்சாமி நடித்ததற்காக அவருக்குத் தர வேண்டிய சம்பளம், அவரிடமிருந்து கடனாகப் பெற்ற 35 லட்ச ரூபாய் ஆகியவற்றைத் தராததற்காக அப்படத்தின் தயாரிப்பாளர் கே முருகன் குமாரைக் கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
அரவிந்த்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஏப்ரல் 2017ம் ஆண்டு, ஏப்ரல் 7ம் தேதி இப்படத்தில் நடிப்பதற்காக தயாரிப்பாளருடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு 3 கோடி ரூபாய் சம்பளம் என்றும், அந்த சம்பளத்தை படத்தின் உருவாக்கத்தின் போது தர வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. அத்துடன் வருமான வரித் துறைக்கு செலுத்த வேண்டிய டிடிஎஸ் தொகையை தயாரிப்பாளர் நேரடியாக அத்துறைக்கு செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது.
அப்படம் முடிவடைந்து 2018 மே 17ம் தேதியன்று வெளியானது. ஆனால், தயாரிப்பாளர் முழு சம்பளத்தையும் கொடுக்காமல் 30 லட்ச ரூபாய் பாக்கி வைத்தார். அது மட்டுமல்ல வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டிய டிடிஎஸ் தொகையான 27 லட்ச ரூபாயையும் செலுத்தவில்லை. மேலும் தயாரிப்பாளர் படத்தை வெளியிட அரவிந்த்சாமியிடம் 35 லட்ச ரூபாய் கடனும் வாங்கியிருந்தார். அதையும் திருப்பித்தரவில்லை.
இதனால், வட்டியுடன் அனைத்துத் தொகையையும் திருப்பித் தரவேண்டும் என 2018ம் ஆண்டு தயாரிப்பாளர் மீது வழக்கு தொடரப்பட்டது. 2019ல் இந்த வழக்கில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அளித்த தீர்ப்பில் தயாரிப்பாளர் முருகன் 65 லட்ச ரூபாயை 18 சதவீத வட்டியுடன் திருப்பித் தரவேண்டும், 27 லட்ச ரூபாயை வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அந்தத் தீர்ப்பை நிறைவேற்றக் கோரி அரவிந்த்சாமி தரப்பில் மீண்டும் மனு செய்யப்பட்டிருந்தது. தயாரிப்பாளர் தரப்பில் வாதிட்ட வக்கீல் தனது மனுதாரர் சொத்து விவரங்களை தாக்கல் செய்துள்ளதாகவும், அவரிடம் சொத்து எதுவுமில்லை என்று வாதிட்டுள்ளார். அவரது வாதத்தைக் கேட்ட நீதிபதி வழக்கை ஜூலை 8க்கு தள்ளி வைத்துள்ளார்.